என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tata Motors"

    • மாருதி சுசுகி 4 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
    • தற்போது டாடா மோட்டார்ஸ் 2 சதவீதம் வரை விலையை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு.

    இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மாருதி சுசுகி சில தினங்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வாகனங்கள் விலைகளை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. மாடல்களுக்கு ஏற்ப அதை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவித்திருந்து. உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவினம் காரணமாக விலை உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வாகனங்கள் விலையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

    கடந்த ஜனவரியில் 3 சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களில் மேலும் கணிசமாக உயர்த்த உள்ளது. 2 சதவீதம் விலை விலை உயர்வு இருக்கும். இது பயணிகள் முதல் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் புது மைல்கல்லை எட்டி அசத்தி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

    "இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நிலையில், வாடிக்கையாளர்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களிடம் இருந்தது. கச்சிதமான வாகனம், நுகர்வோர் எதிர்பார்க்கும் அம்சங்கள் மீது கவனம் செலுத்தினோம்."

    "வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்."

    "தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. விலை மாற்றம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஒட்டுமொத்தமாக உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நவம்பர் 7 ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இம்முறை டாடா கார்களின் விலை 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வின் படி டாடா ஹேரியர் மாடல் விலை தற்போது ரூ. 30 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டாடா சபாரி மாடலின் விலை ரூ. 20 ஆயிரமும், நெக்சான் மாடல் விலை ரூ. 18 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ், டிகோர் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹேச்பேக் மாடலான டாடா டியாகோ விலை தற்போது ரூ. 8 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது. டாடா பன்ச் விலை ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ளது. இவை தவிர டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. டாடா எலெக்ட்ரிக் வாகனங்களில் 50 ஆயிரமாவது யூனிட்டாக நெக்சான் EV மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் இருந்து வெளியிட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
    • டாடா நிறுவத்தின் புதிய CNG மாடல் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG i-CNG வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியாகோ NRG i-CNG விலை ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது இந்தியாவின் முதல் டஃப் ரோடர் CNG என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. புதிய டாடா டியாகோ NRG i-CNG மாடல் XT மற்றும் XZ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டாடா டியாகோ NRG i-CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய டியாகோ NRG i-CNG மாடலின் வெளிப்புறம் பிளாக் பாடி கிலாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் புதிதாக ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பிளாக் ரூஃப், ORVM-கள், ரூஃப் ரெயில்கள், ஃபாக் லைட்கள், டெயில் கேட் மீது பிளாஸ்டிக் கிலாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் கிளவுடி கிரே, ஃபயர் ரெட், போலார் வைட் மற்றும் ஃபாரெஸ்டா கிரீன் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறத்தில் சார்கோல் பிளாக் தீம், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், கூல்டு குளோவ் பாக்ஸ், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஃபிலாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அடஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    டாடா டியாகோ NRG i-CNG XT ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம்

    டாடா டியாகோ NRG i-CNG XZ ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய டாடா எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2022 டாடா டிகோர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா டிகோர் EV விலை ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 2022 டாடா டிகோர் EV மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் முன்பை விட அதிக ரேன்ஜ் வழங்குகிறது.

    2022 டிகோர் EV மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய காரை விட 15 கிலோமீட்டர் வரை அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் தற்போது முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இதன் செயல்திறன் அளவில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வகையில் இந்த கார் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    மேம்பட்ட டாடா டியாகோ EV மாடலில் லெதர் இருக்கை மேற்கவர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலில் டாடாவின் Z கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே டிகோர் EV XZ மற்றும் XZ+ மாடல்களை பயன்படுத்துவோருக்கு இதற்கான அப்டேட் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.

    டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் இந்த சீரிசில் டாப் எண்ட் மாடலாக உள்ளது. இந்த வேரியண்ட் டாடா டிகோர் EV XZ+ வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. புதிய டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இந்தியாவில் எலெக்ட்ரிக் வலாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன.
    • தற்போது டாடா கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது.

    வாகனம் அதன் ஸ்டாக் கண்டிஷனில் இருக்கும் போது தீப்பிடித்து எரிவது மிகவும் துயரமான சம்பவமாகவே இருக்கும். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா ஹேரியர் கார் மாடல் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்க்பப்ட்டு இருந்த போது, தானாக தீப்பிடித்து எரிந்துவிட்டது என கார் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.

    குனல் போகாரா என்ற நபர் கடந்த ஜூலை மாத வாக்கில் டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடலை வாங்கி இருக்கிறார். கார் வாங்கியதில் இருந்து எந்த விதமான மூன்றாம் தரப்பு அக்சஸரீக்களையும் தனது வாகனத்தில் இவர் பயன்படுத்தவில்லை. எனினும், கார் வாங்கிய சில மாதங்களில் அதன் பேட்டரி முழுக்க சார்ஜ் தீர்ந்து போயிருக்கிறது. இதனால் காரை அவர் அருகாமையில் உள்ள சர்வீஸ் செண்டரில் கொடுத்து, பேட்டரியை மாற்றி இருக்கிறார்.

    புதிய பேட்டரி மாற்றிய மூன்றாவது நாளில் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. மீண்டும் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டரில் கார் சரிசெய்யப்பட்டது. பின் போகாரா தனது காரை சீராக பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று 15 கிலோமீட்டர்கள் காரில் சென்று வந்த போகாரா நள்ளிரவு 1.30 மணி அளவில் காரை சாலையின் ஓரத்தில் பார்க் செய்தார். பார்க் செய்யப்பட்ட 15 நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது.

    அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தப்படி, காரின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த கார் உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து, அவரும் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தார். தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதில் கார் முழுக்க தீப்பிடித்து எரிந்து விட்டது.

    காரின் பொனெட்டில் தான் முதலில் தீப்பிடிக்க துவங்கியது என பாதுகாப்பு ஊழியர் தெரிவித்து இருக்கிறார். தனது காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று டாடா மோட்டார்ஸ் விளக்கம் தர வேண்டும் என குனல் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Source: Cartoq

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2022 டிகோர் EV மாடல் இந்திய சந்சதையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம், டாடா டியாகோ EV 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கியகது.

    இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்த விலை காரை முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். முன்பதிவு துவங்கிய முதல் நாளே காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டாடா டியாகோ EV மாடலை முன்பதிவு செய்தனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.

    புதிய டாடா டியாகோ EV மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்த நெக்சான் EV மாடல் இந்தியாவில் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து நெக்சான் EV மேக்ஸ், டிகோர் EV ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.

    இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 89 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. முன்னதாக தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருந்தது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடாட மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • விலை உயர்வு நெக்சான் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தது. அந்த வகையில், நெக்சான் மாடலின் புதிய விலை விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. விலை உயர்வின் படி சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான், XZ, XZA, XZ+ (O), XZA+ (O), XZ+ (O) டார்க் மற்றும் XZA + (O) டார்க் என ஆறு வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

    மற்ற வேரியண்ட்களான ஜெட், காசிரங்கா மற்றும் டார்க் எடிஷன் முன்பை போன்றே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. நிறுத்தப்பட்ட வேரியண்ட்களுக்கு மாற்றாக XZ+ (HS), XZ+ (L), XZ+ (P), XZA+ (HS), XZA+ (L) மற்றும் XZA+ (P) போன்ற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புது வேரியண்ட்களில் எந்த விதமான புது அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.

    விலை உயர்வின் படி டாடா நெக்சான் பெட்ரோல் வேரியண்ட் விலை குறைந்த பட்சமாக ரூ. 6 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நெக்சான் டீசல் வேரியண்ட்களின் விலை குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாடா நெக்சான் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

    டாடா நெக்சான் பெட்ரோல் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 62 ஆயிரத்து 900 ஆகும். டாடா நெக்சான் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 17 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேச்பேக் காராக நானோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • டாடா நானோவின் எலெக்ட்ரிக் வடிவம் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமாக உருவாக்கப்பட்ட கார் டாடா நானோ. இந்திய சந்தையில் டாடா நானோ கார் பல லட்சம் பேரின் கார் வாங்க வேண்டும் என்ற கனவை பூர்த்தி செய்த பெருமையை கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நானோ கார் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் நானோ காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் நான்கு சக்கரங்கள் பிரிவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. அந்த வகையில் பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதையொட்டி வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா நானோ கார் அந்றுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டாடா நானோ எலெக்ட்ரிக் வெர்ஷன் பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இம்முறை இது பற்றிய விவரங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    டாடா நானோவின் X3 பிளாட்ஃபார்ம் கொண்டு அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மோனோக் சேசிஸ் தற்போதைய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட வேண்டும். சஸ்பென்ஷன் மற்றும் டயர் செட்டப் உள்ளிட்டவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

    இது பற்றிய திட்டத்தில் ஆர்வம் செலுத்தும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தின் சென்னையில் உள்ள ஃபோர்டு மறைமலைநகர் ஆலையை கைப்பற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறப்படுகிறது. "அனுமானம் மற்றும் எதிர்கால வாகனங்கள் பற்றி டாடா மோட்டார்ஸ் எவ்வித கருத்தையும் டாடா மோட்டார்ஸ் தெரிவிக்காது," என தனியார் செய்தி நிறுவன கேள்விக்கு டாடா நிறுவன செய்தி தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
    • டாடா நெக்சான் EV சீரிஸ் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய விற்பனையில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் டியாகோ EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருக்கும் டாடா மோட்டார்ஸ், தனது வாகன உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் 50 ஆயிரம் யூனிட்களை கடக்க இருக்கிறது.

    அந்த வகையில், அடுத்த சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபரத்தின் மூலம் பில்லியன் டாலர் வருவாய் எட்டி விடும். நெக்சான் மற்றும் டிகோர் EV மாடல்களின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆண்டிற்கு 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட்கள் வரை எட்டியிருக்கிறது. தற்போது 2024 நிதியாண்டு வாக்கில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த 12-இல் இருந்து 18 மாதங்களுக்குள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவகதாக தகவல் வெளியாகி உள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை சீராக வைத்திருக்கும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் கோடிகளை வருவாயாக ஈட்ட முடியும்.

    இது மூன்று ஆண்டுகளுக்கு முன் கார் வியாபாரத்தில் இருந்து கிடைத்த வருவாய்க்கு இணையானது ஆகும். டியாகோ EV மாடலின் விலை அறிவிக்கப்பட்ட பத்தே நாட்களில், இந்த காரை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். இதுதவிர 50 ஆயிரம் பேர் டியாகோ EV மீது விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆவர்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக விளங்குகிறது.
    • டாடா டியாகோ EV மாடலின் பெரும்பாலான அம்சங்கள் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றஏ வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை விலை உயர்வு நான்கு சதவீதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காரின் விலை எவ்வளவு அதிகரிக்கும் என்ற விவரங்கள் அடுத்த மாதம் தான் வெளியாகும். விலை உயர்வை அடுத்து டாடா டியாகோ EV மாடல் விலை அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம்.

    புதிய டியாகோ EV மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் போதே, அதன் விலை அறிமுக சலுகையாக குறைத்து அறிவிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருந்தது. மேலும் அறிமுக விலை காரை முதலில் வாங்கும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது. எனினும், காருக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து சலுகை முதல் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

    "அறிமுக சலுகை மட்டுமின்றி பேட்டரி விலைகள் 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதும் கார் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவுக்கான நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார். டியாகோ EV மாடலின் பெரும்பாலான பாகங்கள் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
    • சமீபத்தில் டாடா நிறுவனத்தின் டியாகோ எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னணி இடத்தில் உள்ளது. டாடா நெக்சான் EV சீரிஸ் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டிகோர் EV, டியாகோ EV மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    டாடா நெக்சான் EV மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான் EV மாடலில் DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் AC சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இவை காருக்கு அசத்தலான சார்ஜிங் வசதியை வழங்கி வருகின்றன. எனினும், காரின் அருகில் மாடு வரும் போது சிக்கல் ஏற்படுகிறது.

    நெக்சான் EV காரை வைத்திருக்கும் பயனர் ஒருவர் காரின் அருகில் வந்த மாடு காரை உரசியதால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சுமித் என்ற நபர் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த தனது நெக்சானை மாடு உரசியதை அடுத்து என்ன ஆனது என்பதை டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் பதிவில் புகைப்பட ஆதாரத்தையும் அவர் இணைத்து இருக்கிறார்.

    அதன்படி நெக்சான் EV காரை மாடு உரசியதால் அதன் சார்ஜர் முழுமையாக சேதமடைந்து விட்டதாக சுமித் தெரிவித்து இருக்கிறார். கார் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் மாடு அருகில் வந்ததால் சார்ஜர் முழுமையாக உடைந்து இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து கார் உற்பத்தியாளர்கள் கார் மட்டுமின்றி அதன் சார்ஜரை உற்பத்தி செய்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    சுமித் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த டாடா மோட்டார்ஸ், கார் சேதமடைந்த விவரங்களை குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்த வலியுறுத்தி இருக்கிறது. எனினும், இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சார்ஜர் இன்றி நெக்சான் EV காரை காட்சிப்படுத்துவதை தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது.

    ×