என் மலர்
நீங்கள் தேடியது "taylor shop"
கிழக்கு கடற்கரை சாலையில் டைலர் கடையை சூறையாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை கம்பளிசாமிமடம் தெருவை சேர்ந்தவர் சுஜாதா (வயது44). கணவரை விட்டு பிரிந்த இவர் கிழக்கு கடற்கரைசாலை லதா ஸ்டீல் அவுஸ் அருகே லட்சுமி நகரில் டைலர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சுனில்குமார். கல்லூரியில் படித்து வரும் இவர் கல்லூரி முடிந்த பின்னர் தாய்க்கு உதவியாக டைலர் கடைடயை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று 2 வாலிபர்கள் டைலர் கடை முன்பு நின்று கொண்டு சுஜாதாவை முறைத்து பார்த்தனர். இதனை சுனில்குமார் கண்டித்து தட்டிக்கேட்டார். பிறகு அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் சுஜாதாவும், அவரது மகன் சுணில்குமாரும் டைலர் கடையை மூடுவதற்காக பொருட்களை எடுத்து அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை சுனில்குமார் மீது வீசினர். ஆனால் சுனில்குமார் சுதாரித்து கொண்டு ஒதுங்கி கொண்டதால் அந்த பீர் பாட்டில்கள் டைலர் கடையில் இருந்த ஷோகேஸ் கண்ணாடியில் பட்டு நொறுங்கியது.
பின்னர் அந்த வாலிபர்கள் சுஜாதாவுக்கும், அவரது மகன் சுனில்குமாருக்கும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து சுஜாதா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டைலர் கடையை சூறையாடி கொலைமிரட்டல் விடுத்தவர்கள் லாஸ்பேட்டை சின்னையன்பேட் பகுதியை சேர்ந்த பாரதி மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள். #tamilnews
லாஸ்பேட்டை கம்பளிசாமிமடம் தெருவை சேர்ந்தவர் சுஜாதா (வயது44). கணவரை விட்டு பிரிந்த இவர் கிழக்கு கடற்கரைசாலை லதா ஸ்டீல் அவுஸ் அருகே லட்சுமி நகரில் டைலர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சுனில்குமார். கல்லூரியில் படித்து வரும் இவர் கல்லூரி முடிந்த பின்னர் தாய்க்கு உதவியாக டைலர் கடைடயை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று 2 வாலிபர்கள் டைலர் கடை முன்பு நின்று கொண்டு சுஜாதாவை முறைத்து பார்த்தனர். இதனை சுனில்குமார் கண்டித்து தட்டிக்கேட்டார். பிறகு அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் சுஜாதாவும், அவரது மகன் சுணில்குமாரும் டைலர் கடையை மூடுவதற்காக பொருட்களை எடுத்து அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை சுனில்குமார் மீது வீசினர். ஆனால் சுனில்குமார் சுதாரித்து கொண்டு ஒதுங்கி கொண்டதால் அந்த பீர் பாட்டில்கள் டைலர் கடையில் இருந்த ஷோகேஸ் கண்ணாடியில் பட்டு நொறுங்கியது.
பின்னர் அந்த வாலிபர்கள் சுஜாதாவுக்கும், அவரது மகன் சுனில்குமாருக்கும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து சுஜாதா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டைலர் கடையை சூறையாடி கொலைமிரட்டல் விடுத்தவர்கள் லாஸ்பேட்டை சின்னையன்பேட் பகுதியை சேர்ந்த பாரதி மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள். #tamilnews
விழுப்புரத்தில் நள்ளிரவு டெய்லர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
விழுப்புரம்:
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சுதாகர் நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு குமார் (வயது 45) என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை யொட்டி இவரது கடைக்கு புதிய துணிகளை தைக்க ஏராளமானவர்கள் கொடுத்திருந்தனர்.
நேற்று இரவு 12 மணி அளவில் குமார் தைத்த துணிகளை அயன் பாக்ஸ் மூலம் தேய்த்து கொண்டிருந்தார். துணிகளை தேய்த்து முடித்த அவர் அயன் பாக்சை ஆப் செய்யாமல் அப்படியே வைத்து விட்டு கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அந்த அயன்பாக்ஸ் சூடேறி அருகில் இருந்த துணிகளில் தீப்பிடித்தது. பின்னர் மளமளவென்று தீப்பிடித்தது.
டெய்லர் கடையில் இருந்து புகை வெளியே வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் ஜெயகணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் டெய்லர் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
மற்றொரு சம்பவம்...
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரே தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று இரவு 8.30 மணிக்கு மீட்டர் பாக்சில் திடீரென்று தீப்பிடித்தது.
இதையறிந்ததும் அங்கிருந்த ஊழியர் செல்வராஜ் என்பவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சுதாகர் நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு குமார் (வயது 45) என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை யொட்டி இவரது கடைக்கு புதிய துணிகளை தைக்க ஏராளமானவர்கள் கொடுத்திருந்தனர்.
நேற்று இரவு 12 மணி அளவில் குமார் தைத்த துணிகளை அயன் பாக்ஸ் மூலம் தேய்த்து கொண்டிருந்தார். துணிகளை தேய்த்து முடித்த அவர் அயன் பாக்சை ஆப் செய்யாமல் அப்படியே வைத்து விட்டு கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அந்த அயன்பாக்ஸ் சூடேறி அருகில் இருந்த துணிகளில் தீப்பிடித்தது. பின்னர் மளமளவென்று தீப்பிடித்தது.
டெய்லர் கடையில் இருந்து புகை வெளியே வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் ஜெயகணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் டெய்லர் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
மற்றொரு சம்பவம்...
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரே தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று இரவு 8.30 மணிக்கு மீட்டர் பாக்சில் திடீரென்று தீப்பிடித்தது.
இதையறிந்ததும் அங்கிருந்த ஊழியர் செல்வராஜ் என்பவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.