என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanu"

    • கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்’.
    • இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்.

    கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆளவந்தான்'. இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி தாணுவின்  'வி கிரியேஷன்ஸ்' இப்படத்தை தயாரித்தது. கமலுடன் ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    கமல்ஹாசன் இப்படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இவரே நடித்திருப்பார். அக்காலக்கட்டத்திலேயே அனிமேஷன் காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை பயன்படுத்தி வித்தியாசமாக படத்தை எடுத்திருப்பர்.

    இப்படம் சில மாதங்களுக்கு முன் டிஜிட்டல் மெருகேற்றல் செய்ட்து ரிரீலிஸ் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிஜிட்டல் மெருகேற்று செய்யப்பட்ட வெர்ஷன் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என பிசியாக இருக்கும் கவுதம் மேனன், ரஜினியுடன் இணைவதை யாரோ தடுத்துவிட்டனர் என வருத்தம் தெரிவித்துள்ளார். #GauthamMenon #Rajinikanth
    தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். தனுசை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என பிசியாகி இருக்கும் கவுதம் மேனன் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறார்.

    அந்த திட்டம் என்ன ஆனது என்பது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் ‘துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினியிடம் கூறினேன். தயாரிப்பாளர் தாணு கூட்டிக்கொண்டு போனார்.

    காலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பராக இருக்கு. யார் எல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எத்தனை நாள் தேவைப்படும்’ என்று கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்தோ‌ஷமாக என்னை அனுப்பி வைத்தார் தாணு.



    நானும் என் குழுவினருடன் அமர்ந்து எப்படிப் பண்ணலாம் என்று உடனே திட்டமிட்டுக் கொண்டு இருந்தேன். மாலையில் தாணு சார் போனில் ‘இல்லை... ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லியிருக்கிறார்கள். இப்போது நடக்காது.

    நான் ரஞ்சித்தை வைத்து பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது. யார் என்ன சொன்னாங்க என்று எதுவுமே தெரியாது. நல்லவங்க யாரோ ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் தெரியும்’ என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார். ரஜினியை கவுதம் மேனன் இயக்குவதை தடுத்தது யார்? என்ற கேள்வி தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. #GauthamMenon #Rajinikanth

    ×