என் மலர்
நீங்கள் தேடியது "Thanumalayan Temple"
- சிலை உச்சி முதல் பாதம் வரை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது.
- தற்போது 18 அடி உயர சிலையை மட்டுமே வெளியே தெரியும். மீதியுள்ள 4 அடி பூமிக்குள் இருக்கிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிலர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு படையெடுத்து வந்தனர். அப்போது சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் மூலஸ்தானத்தை சுவர் கட்டியும், நகை-உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றியும் அப்பகுதியினர் பாதுகாத்தனர். இதனால் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் காப்பாற்றப்பட்டது.
அப்படி பாதுகாக்கப்பட்டவற்றில் ஒன்று, இன்றும் இவ்வாலயத்தில் கம்பீரமாக நிற்கும் 22 அடி உயர அஞ்சலி ஹஸ்த அனுமனின் சிலை.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த அனுமன் சிலையை, படையெடுப்பாளர்களிடம் இருந்து காப்பதற்காக, கோவில் கிணற்றின் அருகில் 23 அடி நீளத்தில் பூமியைத் தோண்டி, சிலை மண்ணுக்குள் இருக்கும் விதமாக குப்புற படுக்க வைத்தனர். மேலோட்டமாக பார்ப்பதற்கு சாதாரண கற்தூணின் மேல் பாகம் போல்தான் அது தெரியும்.

பல காலம் நடந்த படையெடுப்பால் அந்த சிலையை யாரும் மண்ணில் இருந்து வெளியே எடுக்கவில்லை. காலப்போக்கில் அந்த அனுமன் சிலை மண்ணிலேயே புதைந்து கிடந்தது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன்மேல் அமர்ந்து இளைப்பாறுவதும், சிறுவர்கள் அதன் மீது ஏறி விளையாடுவதுமாக காலம் கடந்தது.
85 ஆண்டுகள் மண்ணில் புதையுண்டிருந்த நிலையில், ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த கோவில் நிர்வாகிகள், அதுதொடர்பாக பிரசன்னம் பார்த்த போது, அந்த இடத்தில் ஆஞ்சநேயர் சிலை இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த இடம் தோண்டப்பட்டு, விஸ்வரூப அனுமன் சிலை வெளியே எடுக்கப்பட்டது.

பின்னர் அந்த சிலையை நிறுவ இடம் தேர்வு நடந்தது. அதன்படி 1930-ம் ஆண்டு சித்திரை 19-ந் தேதி, கோவிலில் உள்ள ஸ்ரீராமர்- சீதாதேவி சன்னிதிக்கு எதிரில் இந்த ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது.
ஆகம விதிகளின்படி அஷ்டபந்தனம் செய்து பிரதிஷ்டை செய்யாததால், யார் வேண்டுமானாலும் இந்த அனுமனை தொட்டு வணங்கலாம்.
22 அடி நீளம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையில், தற்போது நாம் காண்பது 18 அடி உயர சிலையை மட்டுமே. மீதியுள்ள 4 அடி பூமிக்குள் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உச்சி முதல் பாதம் வரை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது.
இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அதிகாலை 5.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தாணுமாலயசாமி சன்னதி முன் வைத்தனர்.
பின்னர், சாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்த பின்பு அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி வழங்கினார். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு நெற்கதிர்களை கொண்டு செல்வதால் நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்களது வாழ்வும் செழிப்படையும் என்பது ஐதீகம் ஆகும்.
5-ம் திருவிழாவான 19-ம் தேதி அதிகாலை கருட தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரரும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் பெருமாளும் மற்றும் உற்சவ மூர்த்திகளும் வெளியே வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. அம்மன் தேரை ஏராளமான பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கத்தினரும் செய்துள்ளனர்.
5-ம் திருவிழாவான நேற்று அதிகாலை கருட தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரரும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் பெருமாளும் மற்றும் உற்சவ மூர்த்திகளும் வெளியே வந்தனர். அவர்களுடன் வேளிமலை முருகனும், மருங்கூர் சுப்பிரமணியசாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்த பின்பு நடுத்தெருவில் உள்ள வீரமார்த்தாண்டன் கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூன்று பேரும் நின்றனர்.
அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியாரும் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கியதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சியை காண நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர். அவர்கள் கருட தரிசன நேரத்தில் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 22-ந் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கத்தினரும் செய்துள்ளனர்.
கொடியேற்று விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை 8.45 மணி அளவில் கொடிபட்டத்தை மேளதாளத்துடன் ஊர்வலமாக நான்கு ரதவீதிகள் வழியே கொண்டுசென்று மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.
நேற்று காலை 9.35 மணிக்கு மேளதாளம், பஞ்சவாத்தியத்துடன் கொடிபட்டத்தை கொடிமரத்தில் திலீபன் நம்பூதிரி ஏற்றிவைத்தார். பின்னர் கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா செய்தார். பின்னர் தேர்களுக்கு கால்கோள் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், நகர செயலாளர் சந்துரு, ஆ.கே.ஆறுமுகம், நாகத்தாய், சாஜின் காந்தி, ஒன்றிய செயலாளர் மதியழகன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், சுவாமி பத்மேந்த்ரா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், பேரூராட்சி செயல்அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கொடியேற்றம் முடிந்த பின்னர் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து ரதவீதிகள் வழியே திருமுறை பேரவை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் திருவாவடுதுறை ஆதீனம் சென்றடைந்தது. தொடர்ந்து தம்பையா ஓதுவாரின் திருவெம்பாவை பாராயண நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கோவில் கலையரங்கத்தில் சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடகத்தினர் சார்பில் நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மார்கழி திருவிழா வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி போன்றவை நடைபெறுகிறது.
9-ம் திருவிழாவான 22-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கமும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழாவையொட்டி மாவட்ட கலெக்டர் பிரசாத் வடநேரே உத்தரவின்பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேரோடும் ரதவீதிகளில் செப்பனிடும் பணி நடந்தது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி பேரூராட்சி நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் கோவில் தெப்பக்குளத்தில் பைபர் படகுகளுடன் தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுசீந்திரம் புறவழிச்சாலையில் வாகனங்கள் திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடைபெறுகிறது. இக்கோவிலில் இருகொடிமரங்கள் உள்ளது. சித்திரை மற்றும் மார்கழி திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமம், காலை 9.45 மணிக்கு திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்துவந்து சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, வட்டபள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண்மடம் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், திருக்கோவில் பணியாளர்கள், பக்தர் சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனைகள் ஆகியவை நடக்கிறது.
9-ம் நாள் திருவிழாவான வருகிற 22-ந்தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும், பெருமாளும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க கோலாகலமாக பக்தர்கள் இழுத்து வருவார்கள்.
10-ம் நாள் திருவிழாவான 23-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவான் அதிகாலை 4 மணியளவில் பசு கன்றுகுட்டி முகத்தில் விழித்து எழுதல், தொடர்ந்து 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடக்கிறது. இந்த கோவிலில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன. சித்திரை மற்றும் மார்கழித் திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9.15 மணிக்கு மேல் திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்படும். கொடியை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ ஏற்றுகிறார். அதனைத்தொடர்ந்து கொடிபீடத்துக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தினமும் காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வருவர்.
9-ஆம் திருவிழாவான வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி இரண்டு அம்பாளையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க பக்தர்கள் இழுத்து வருவர்.
திருவிழா இறுதி நாளான 23-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவானுக்கு எண்ணெய்காப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும் பக்தர் சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
இன்று முதல் ஆடி மாதம் முழுவதும் காலையில் தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ருத்ர ஜெபத்துடன் மகாதாரை அஷ்டாபிஷேகம், நண்பகல் 11 மணிக்கு தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது.
இதைப்போன்று இன்று முதல் 29-ந் தேதி வரை ஆடிமாத களபாபிஷேகம் நடைபெறுகிறது. களப அபிஷேகத்தையொட்டி விஷ்ணுவுக்கும், தாணுமாலயசாமிக்கும் தினந்தோறும் நடைபெறும் நித்யகாரிய பூஜைகளுக்கு பின்பு தங்கக் குடத்தில் சந்தனம், களபம் மற்றும் நறுமணப்பொருட்கள் அடங்கிய களப அபிஷேகம் நடைபெறுகிறது.
29-ந் தேதி உதய அஸ்தமன பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.