என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thinnai campaign"

    • பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
    • கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு அனைத்துக் கட்சிகளும் இப்போதே தயாராகத் தொடங்கியுள்ளன.

    ஆளும் தி.மு.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜய்யும் நாளை பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் நிலையில் பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. வீடு வீடாக சென்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்த பிரசாரம் நடந்து வருகிறது.

    இதுவரை லட்சக்கணக் கான மக்களை திண்ணை பிரசாரம் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

    நாளை (வெள்ளிக்கி ழமை) 7-வது வாரமாக திண்ணை பிரசாரம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் சுமார் ஒரு லட்சம் பேரை சந்தித்து பேச அ.தி.மு.க. இளம் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த திண்ணை பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    ×