என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tithi"

    • தேதி என்பதன் மருவுதான் திதி என்று சொல்லப்படுகிறது.
    • தேதி என்பது மேல்நாட்டு முறை. திதி என்பதுதான் நம் நாட்டு முறை.

    தேதி என்பதன் மருவுதான் திதி என்று சொல்லப்படுகிறது. தேதி என்பது மேல்நாட்டு முறை. திதி என்பதுதான் நம் நாட்டு முறை.

    சூரியன் என்ற கிரகத்தின் மின்சக்தி உடைய நாளே பிரதமை எனப்படும். எனவே, சூரியனே முதல் கிரகமாக இருப்பதால் பிரதமை என்ற சொல் முதன்மையை குறிக்கிறது.


    சந்திரன் கிரகத்தின் மின்சக்தி உடைய நாள் துவிதியை திதி எனப்படும். சந்திரன், சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கிரகமாகும். இரண்டாவது என்பதற்கு சமஸ்கிருதத்தில் துவிதியை என்று பெயர்.

    குரு கிரகத்தின் மின்சக்தி உடைய நாள் திருதியை திதி எனப்படும். திருதியை என்றால் சமஸ்கிருதத்தில் மூன்று என்று பொருள். மூன்று என்பது குரு என்ற கிரகத்தைக் குறிப்பதாகும்.

    ராகு கிரகத்தின் மின்சக்தி உடைய நாள் சதுர்த்தி திதி எனப்படும். சதுர்த்தி என்றால் சமஸ்கிருதத்தில் நான்கு என்று பொருள். நான்கு என்பது ராகு கிரகத்தைக் குறிப்பதாகும்.

    புதன் கிரகத்தின் மின்சக்தி உடைய நாள் பஞ்சமி திதி எனப்படும். பஞ்சமி என்பது சமஸ்கிருதத்தில் ஐந்தாவது ஆகும். ஐந்து என்பது புதனைக் குறிக்கும்.

    சுக்கிரன் கிரகத்தின் மின்சக்தி அதிகம் உள்ள நாள் சஷ்டி திதி எனப்படும். சஷ்டி என்பது சமஸ்கிருதத்தில் ஆறு எனப் பொருள்படும். ஆறு என்பது சுக்கிரனை குறிப்பதாகும்.

    கேது கிரகத்தின் மின்சக்தி அதிகம் உள்ள நாள் சப்தமி திதி எனப்படும். சப்தமி என்பது சமஸ்கிருதத்தில் ஏழு எனப்படும். ஏழு என்பது கேதுவைக் குறிக்கும்.

    சனி கிரகத்தில் மின் சக்தி அதிகம் உள்ள நாள் அஷ்டமி திதி எனப்படும். அஷ்டமி என்பது சமஸ்கிருதத்தில் எட்டு எனப் பொருள்படும். எட்டு என்பது சனி கிரகத்தைக் குறிப்பதாகும்.

    செவ்வாய் கிரகத்தின் மின்சக்தி அதிகம் உள்ள நாள் நவமி திதி எனப்படும். நவமி என்பது சமஸ்கிருதத்தில் ஒன்பது எனப் பொருள்படும். ஒன்பது என்பது செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும்.


    சூரிய கிரகத்தின் மின் சக்தி பூமியில் பத்து மடங்கு அதிகம் உடைய நாள் தசமி திதியாகும். தசமி என்பது சமஸ்கிருதத்தில் பத்து எனப் பொருள்படும்.

    சந்திர கிரகத்தின் மின்சக்தி பூமியில் பத்து மடங்கு அதிகம் உடைய நாள் ஏகாதசி திதியாகும். ஏகாதசி என்பது சமஸ்கிருதத்தில் பதினொன்று எனப் பொருள்படும்.

    குரு கிரகத்தின் மின் சக்தி பத்து மடங்கு அதிகம் உடைய நாள் துவாதசி திதி எனப்படும். துவாதசி என்பது சமஸ்கிருதத்தில் பன்னிரண்டு எனப் பொருள்படும்.

    ராகு கிரகத்தின் மின்சக்தி பத்து மடங்கு பூமியில் உடைய நாள் திரயோதசி திதி எனப்படும். திரயோதசி என்பது சமஸ்கிருதத்தில் பதிமூன்று என்று பொருள்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சஷ்டி: பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி.
    • தசமி: சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான்.

    * பிரதமை:- சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவன். செல்வந்தன்.

    * துதியை:- கீர்த்தி உடையவன், சத்திவாசகன், பொய் சொல்லாதவன், பொருள் சேர்ப்பவன், தன் இனத்தாரை ரட்சிப்பவன்.

    * திருதியை:- எண்ணியதை முடிப்பவன், தனவான், பயம் உள்ளவன், பராக்கிரமம் உடையவன், சுத்தமுடையோன், திருக்கோவில் கைங்கரியம் செய்பவன்.

    * சதுர்த்தி:- அளவற்ற காரியங்களை சிந்திப்பவன். தேச சஞ்சாரம் செய்பவன், எல்லோருக்கும் நண்பன், அருள் மந்திரவாதி.

    * பஞ்சமி:- வேத ஆராய்ச்சி உடையோன், பெண் மேல் அதிக பிரியமுள்ளவன், கருமி, துக்கம் உடையோன்.

    * சஷ்டி:- பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி.

    * சப்தமி:- செல்வம், தயாள சிந்தனை உடையோன், பராக்கிரமசாலி, எதிலும் கண்டிப்பு உடையவன்.

    * அஷ்டமி:- புத்ர செல்வம் உடையோன், காமூகன், பிறவி செல்வம் உடையவன், லட்சுமி வாசம் உடையோன்.

    * நவமி:- கீர்த்தி உடையவன், மனைவி மக்களை விரும்பாதவன், அதிக பெண் சிநேகம் உடையவன், கமனம் செய்பவன்.

    * தசமி:- சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான்.

    * ஏகாதசி:- செல்வந்தன், நீதியுடன் இருப்பவன், அழகற்றவன், உதிதமானதை செய்பவன்.

    * துவாதசி:- செல்வந்தன், தர்மவான், நூதன தொழில் செய்பவன், சீலம் உள்ளம் உள்ளவன்.

    * திரயோதசி:- உறவினர் இல்லாதவன், மாந்தீரிகன், யோபி, கஞ்சன், கீர்த்திசாலி.

    * சதுர்தசி:- குரோதம் உடையோன், பிறர் பொருளை அபகரிப்பதில் பிரியன், கோபி, பிறரை துஷ்டிப்பவன்.

    * பவுர்ணமி:- புத்தி, விந்தை, பொறுமை, சத்யவான், தயாள சிந்தனை உடையோன், கலங்க முடையோன், உக்ரமுள்ள தேவதையை பூஜிப்பவன்.

    • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை திதி என்கிறோம்.
    • ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விஷேசத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

    வானில் தோன்றும் நட்சத்திரங்கள் அத்தனையையும் 27 பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் நவகிரகங்களின் நிலையைக் கொண்டே, பூமியில் வாழும் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய ஜீவராசிகளும், மரம்செடிகொடிகளும், மலைகளும் ஏற்றத்தாழ்வு பெறுகின்றன.

    நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் ஆகிய ஐந்தும் தான் ஆதாரமாக உள்ளன.

    இதைத்தான் பஞ்சாங்கம் (பஞ்ச+அங்கம்) என்று சொல்கிறார்கள். இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும்.

    விரோதிகள் வலுவிழப்பார்கள். கெட்ட கனவு மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்கா ஸ்நான பலன் கிடைக்கும். கோ தானத்தினால் உண்டாகும் பலன்களுக்கு இணையான சுப பலன்கள் உண்டாகும். நீண்ட ஆயுளும், எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.

    தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும்.

    பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு அதன் பின்னர் குளித்து விட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பது நல்லது.

    பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்த திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்த திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.

    திதி என்ற வடமொழி சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.

    சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை திதி என்கிறோம். மொத்தம் திதிகள் 15 ஆக அமைகின்றன. அமாவாசைக்குப் பிறகும் பவுர்ணமிக்கு பிறகும் இந்த திதிகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக வருகின்றன.

    பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி மீண்டும் பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி அமாவாசை ஆகியவை திதிகளாகும்.

    திதிகள் மாறி மாறி வருகின்றன. ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விஷேசத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

    விநாயகர் சதுர்த்தி, ரிஷி பஞ்சமி, கந்த சஷ்டி, ரத சப்தமி, கோகுலாஷ்டமி, ராம நவமி, விஜய தசமி, வைகுண்ட ஏகாதசி, சிரவண துவாதசி, நரக சதுர்த்தசி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவைகள் திதிகளுடன் இணைந்த விசேஷ நாட்களாகும்.

    வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு.

    பிரதமை:

    வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.

    துவிதியை:

    அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டிட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.

    திருதியை:

    குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கவுரி (பராசக்தி).

    சதுர்த்தி:

    முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

    பஞ்சமி:

    எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். இது விசேஷமான திதி ஆகும். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம்.

    விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.

    சஷ்டி:

    சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

    இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

    சப்தமி:

    பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்க லாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

    இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.

    அஷ்டமி:

    பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.

    நவமி:

    சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.

    தசமி:

    எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிக பணிகளுக்கு உகந்த நாள். பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.

    ஏகாதசி:

    விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.

    துவாதசி:

    மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.

    திரயோதசி:

    சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புகள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

    சதுர்த்தசி:

    ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.

    பவுர்ணமி:

    ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

    அமாவாசை:

    பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். எந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.

    ஆன்மிகம், இறை வழிபாடு, ஐதீகப்படியான பரிகாரங்கள், பிரார்த்தனைகள் பற்றி நீங்கள் எத்தனையோ புத்தகங்களைப் படித்து இருப்பீர்கள். இவற்றுக்கு அடிப்படையாக, அச்சாரமாக இருப்பது பஞ்சாங்க குறிப்புகள் தான். இந்த குறிப்புகளைக் கொண்டே உற்சவங்கள், விழாக்கள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    அதிலும் பஞ்சாங்கத்தின் ஒரு அங்கமான திதிகள், ஆன்மிக வழிபாட்டுக்கு நமக்கு கலங்கரை விளக்காகத் திகழ்கின்றன. இதை வழிபாடுகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். திதிகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வழிபாடுகள் செய்தால், துல்லியமான, முழுமையான பலன்களை சிந்தாமல், சிதறாமல் 100 சதவீதம் அப்படியேப் பெறலாம்.

    ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் பொதுவான இறைவழிபாடுகள், பரிகார பூஜைகளில் ஈடுபடுகிறோமேத் தவிர திதிகளை அறிந்து கொண்டு தினமும் அதற்கு ஏற்ப வழிபாடுகளையோ, பரிகாரங்களையோ செய்வதில்லை.

    தமிழ்நாட்டு மக்களிடையே இனியும் அந்த குறை இருக்கக் கூடாது என்பதற்காகவே, உங்களுக்கு உதவும் வகையில் திதிகள் மற்றும் அது தொடர்பான வழிபாடுகள் பற்றிய தகவல்கள் கொண்ட இந்த தொகுப்பை மாலைமலர் உங்களுக்குத் தருகிறது.

    பொதுவாக நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பதற்கு நாம் பஞ்சாங்கத்தைப் பார்க்கிறோம். பஞ்ச அங்கங்களைத் தன்னிடம் கொண்டதால் அது பஞ்சாங்கம் எனப்படுகிறது. அந்தப் பஞ்ச அங்கங்கள் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவையாகும்.

    ஒவ்வொரு நாளும் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற இந்த ஐந்து அங்கங்களை யார் தெரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்குப் பாவம் கிடையாது. மேலும் அவர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

    திதியைத் தெரிந்து கொள்வதால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். இதனால் செல்வம் பெருகும்.

    வாரத்தைத் தெரிந்து கொள்வதால் தீர்க்கமான ஆயுள் கிடைக்கும். ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைத் தெரிந்து கொள்வதால் முற்பிறவியில் செய்த பாவம் போகும்.

    யோகத்தைத் தெரிந்து கொள்வதால் ஆரோக்கியம் உண்டாகும். வியாதிகள் போகும்.

    கரணத்தைத் தெரிந்து கொள்வதால் அன்றைய காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    தினமும் காலையில் காலண்டர், பஞ்சாங்கம் அல்லது தினசரி நாளிதழ்களில் இருந்து இவற்றைத் தெரிந்து கொள்வது நன்மை பயக்கும். இதற்கு அதிக நேரமும் ஆகாது. எனவே தினமும் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

    குறிப்பாக பஞ்சாங்கத்தில் மறக்காமல் இன்றைக்கு என்ன திதி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த திதியை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப அன்றைய தினத்தில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை செய்தல் வேண்டும். இதனால் தினமும் வாழ்வில் வெற்றி பெறலாம்.

    இத்தகைய சிறப்புடைய திதிகளும், வழிபாடுகளும் பற்றி விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

    ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
    ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

    சுக்லபட்சம் (வளர்பிறை)

    1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
    2. துவதியை - பிரம்மா
    3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
    4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
    5. பஞ்சமி - திரிபுர சுந்தரி
    6. சஷ்டி - செவ்வாய்
    7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்
    8. அஷ்டமி - காலபைரவர்
    9. நவமி - சரஸ்வதி
    10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
    11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
    12. துவாதசி - மகா விஷ்ணு
    13. திரயோதசி - மன்மதன்
    14. சதுர்த்தசி - காளி
    15. பவுர்ணமி - லலிதாம்பிகை

    கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)

    1. பிரதமை - துர்க்கை
    2. துவதியை - வாயு
    3. திரிதியை - அக்னி
    4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
    5. பஞ்சமி - நாகதேவதை
    6. சஷ்டி - முருகன்
    7. சப்தமி - சூரியன்
    8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
    9. நவமி - சரஸ்வதி
    10. தசமி - எமன் மற்றும் துர்க்கை
    11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
    12. துவாதசி - சுக்ரன்
    13. திரயோதசி - நந்தி
    14. சதுர்த்தசி - ருத்ரர்
    15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி,

    அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்.
    ×