என் மலர்
நீங்கள் தேடியது "Tonga"
- டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது.
நுகுஅலோபா:
தென்பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையை டோங்கா தீவு திரும்பப் பெற்றுள்ளது.
- நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கத்தின் எதிரொலியால் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று மாலை 5.48 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து தகவலும் வெளியாகவில்லை.
- டோங்காவின் நிலங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்கி, வெள்ளையருக்கு துளிநிலத்தை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றினார்.
- பூடானுக்கு அடுத்து உலகின் மிக எளிமையான அரசவம்சம் என டோங்கா அரசவம்சத்தை சொல்லலாம்.
எந்த நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கும் உள்ளாகாமல் 3000 ஆண்டுகளாக சுதந்திரமாக இருக்கும் நாடு எது? டோங்கா.
பெங்களூர் அளவு நிலப்பரப்பு உள்ள தீவுக்கூட்டம். 1 லட்சம் மக்கள் தொகை. ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே ஐயாயிரம் கிமீ தொலைவில் தென்பசிபிக் கடலில் உள்ள நாடு டோங்கா. பக்கத்து நாடு எதற்காவது போகவேண்டுமெனில் ஆயிரம் கிமீ படகில் போகவேண்டும். அதனால் தான் யாரும் ஐரோப்பியர் வரும்வரை டோங்காவை ஆக்கிரமிக்க முயலவில்லை.
ஆய்வுகள் அங்கே கிமு 800 வாக்கில் பாலினேசிய மக்கள் குடியேறியதாக காட்டுகின்றன. அதன்பின் மெதுவாக அதன் தீவுகூட்டங்களில் குடியேற்றங்கள் உருவாகி, பல குடிகளாக பிரிந்து, டோங்கா எனும் நாடாக அவர்கள் உருவானார்கள். கிபி 1200ம் ஆண்டுவாக்கில் டோங்கா மன்னன் ஒருவன் ஆயிரம் கிமீ தள்ளி இருக்கும் சமோவ நாடு மேல் படை எடுத்தான். அப்போதுதான் டோங்கா எனும் நாடு இருப்பதே வரலாற்றில் பதிவாகிறது.
அதன்பின் 1616ம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள் டோங்காவை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அதை பிடித்து என்ன செய்ய என விட்டுவிட்டார்கள். கிபி 1770ம் ஆண்டு ப்ரிட்டிஷார் அங்கே வந்து இறங்குகிறார்கள். அவர்கள் அருகே இருந்த சமோவா, பிஜியை எல்லாம் பிடிக்க, டோங்காவையும் பிடித்து தேயிலை, கரும்பு தோட்டங்கள் அமைப்பார்கள் என்ற அச்சம் எழுந்தது.
டோங்காவின் மன்னர் ஜார்ஜ் டுபாவு அப்போது தந்திரமாக காய் நகர்த்தினார். அவருக்கு ப்ரிட்டிஷ் மன்னர் ஜார்ஜின் பெயர்தான். அத்துடன் ப்ரிட்டிஷார் பாணியில் டோங்காவுக்கு அரசியல் சாசனம், மனித உரிமைகளை எல்லாம் இயற்றினார். கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தை கொன்டுவந்தார். ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை என்பது மக்களின் உரிமை என அரசியல் சட்டத்தில் பொறித்தார். இன்றும் டோங்காவுக்கு போனால் ஞாயிற்றுக்கிழமை எந்த கடைகளும் திறந்திருக்காது.
அத்துடன் டோங்காவின் நிலங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்கி, வெள்ளையருக்கு துளிநிலத்தை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றினார். இதனால் இந்தியா, பிஜி, மேற்கிந்திய தீவுகளில் செய்தது போல காலனிகள் அமைக்கவும், தோட்டங்கள் அமைக்கவும் இயலாமல் போனது. மன்னரின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பல ப்ரிட்டிஷார் பரமரசிகர்களாக இருந்தார்கள். அதனால் டோங்காவை காலனிமயம் ஆக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்றும் அதே அரசவம்சம் தான் டோங்காவை ஆண்டுவருகிறது. பூடானுக்கு அடுத்து உலகின் மிக எளிமையான அரசவம்சம் என டோங்கா அரசவம்சத்தை சொல்லலாம்.
- நியாண்டர் செல்வன்
பசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நியாபு நகரில் இருந்து 470 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். #TongaEarthquake