என் மலர்
நீங்கள் தேடியது "TT Worlds"
- உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.
- முதல் இரண்டு சுற்றில் மணிகா பத்ரா வெற்றி பெற்றிருந்தார்.
டர்பன்:
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, 13-வது இடத்தில் உள்ள அட்ரினா டியாஸ்சை (புயர்டோரிகோ) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 11-6, 10-12, 9-11, 11-6, 11-13, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் அட்ரினாடியாஸ்சிடம் போராடி வீழ்ந்து நடையை கட்டினார்.
முதல் இரண்டு சுற்றில் மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.