என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uttarakand"

    • உங்களுடைய 'ஹெல்ப்' இல்லையென்றால் எங்களால் வந்திருக்க முடியாது என்றார்.
    • முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டோம். பிறகு 20 பேர் என 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உள்ள பராசக்தி என்ற பெண்ணிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

    வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன் என்றார். அதற்கு அந்த பெண் வணக்கம் தெரிவித்து விட்டு நல்லபடியா வந்திட்டோம் என்றார். உங்களுடைய 'ஹெல்ப்' இல்லையென்றால் எங்களால் வந்திருக்க முடியாது என்றார்.

    உடனே முதலமைச்சர் அவரிடம், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

    மருத்துவ பரிசோதனையில் இருக்கிறோம் என்று பதில் அளித்தார். அங்கிருந்து வந்ததும் இங்கு ஏற்பாடு செய்து ஊருக்கு செல்ல உதவிடுமாறு சொல்லி இருக்கிறேன் என்றார்.

    அப்போது அந்த பெண், முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டோம். பிறகு 20 பேர் என 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    உடனே முதலமைச்சர், "தைரியமாக இருங்கள்" என்று ஆறுதல் கூறினார். "நான் பேசியதாக எல்லோரிடமும் சொல்லுங்கள். அங்கிருக்கும் கலெக்டரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்" என்றார்.

    உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Uttarakand #Illicitliquor
    டேராடூன்:

    உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

    இதில் 12 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை மோசமடைந்து உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூரில் 18 பேரும், உத்தராகண்டில் 16 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன உள்ளூர் அதிகாரிக 13 பேரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Uttarakand #Illicitliquor
    உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Uttarakand #Illicitliquor
    டேராடூன்:

    உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது.

    இந்நிலையில், இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மோசமடைந்து உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

    சட்ட விரோதமாக நடக்கும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு உள்ளூர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Uttarakand #Illicitliquor
    ×