என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uttarpradesh"

    உத்தரபிரதேச கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். #Muzaffarnagarriots
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம்  முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் பரவியது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர்.

    இந்நிலையில் கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவ்ரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவர்கள் குற்றவாளிகள் என கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவித்தார்.

    தீர்ப்பு வழங்கப்பட்டபோது, முஜாமில் தவிர மற்ற 6 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். ஆனால், புலந்த்ஷர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஜாமில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சரியான பாதுகாப்பு இல்லாததால் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வர இயலவில்லை என அரசாங்க வக்கீல் அஞ்சும் கான் கூறியுள்ளார்.

    குற்றவாளிகள் 7 பேருக்குமான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. #Muzaffarnagarriots  

    மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உத்தரபிரதேசத்தில் கோட்சே போன்று காந்தியின் உருவத்தினை சுட்டு போட்டோ எடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். #Gandhiphoto #womanarrested
    அலிகார்:

    உத்தரபிரதேசத்தில்  கடந்த ஜனவரி 30ம் தேதி காந்தியின் நினைவு தினத்தினையொட்டி, அலிகார் பகுதியில் உள்ள தப்பாலுக்கு அருகே காந்தியை அவமதிப்பதை போன்று , உருவப்படத்தை சுட்டும், அவரை கொலை செய்த கோட்சே படத்துக்கு மாலை அணிவித்தும் இந்து அமைப்புகள் கொண்டாடின.



    இந்த செயலைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 4ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி  பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழகத்தில் வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சித்குமார், டி.வி.துரைராஜ், சங்கர் என பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் காந்தியை கோட்சே சுட்டதை நினைவுப்படுத்துவதைப்போல துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பெண் பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோரை அலிகார் போலீசார் கைது செய்துள்ளனர். தப்பால் பகுதியைச் சேர்ந்த இவர்கள் இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  #Gandhiphoto #womanarrested
    உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி 10 நிமிடம் காலதாமதமாக வீட்டிற்கு வந்ததால் மூன்று முறை தலாக் சொல்லி கணவர் விவாகரத்து செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. #UPtripletalaq
    எட்டா:

    முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி, ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நிறைவேறியது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில், செல்போன் மூலம் மூன்று முறை தலாக் கூறி கணவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறியதாவது:

    நான் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண். எனது அம்மாவின் வீட்டிற்கு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாட்டியை காண சென்றேன். எனது கணவர் அரை மணி நேரத்திற்குள் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டும் என கூறினார். அங்கிருந்து வர 10 நிமிடம் காலதாமதம் ஆனது. இதனால் எனது அண்ணனுக்கு போன் செய்து என்னிடம் மூன்று முறை தலாக் என கூறினார். இதை கேட்டவுடன் மனமுடைந்தேன்.



    மேலும் திருமணத்தின்போது வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தியுள்ளார். ஏழ்மையின் காரணமாக கணவர் வீட்டார் கேட்ட எதையும் தர இயலவில்லை. இதனிடையே கரு கலைப்பும் செய்துள்ளேன். அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கான நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அலிகஞ்ச் பகுதி அதிகாரி அஜய் பாதுரியா உறுதி அளித்தார்.  #UPtripletalaq
    உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர் மகனை கடத்திய கடத்தல்காரர்கள், பணம் வராத ஆத்திரத்தில், 6 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Sultanpur #Kidnappers #kill6yearoldboy #Abductingforransom
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டனர். மகன்கள் வீடு திரும்பாததை அறிந்த ராகேஷ் விசாரித்தார். அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். 

    சிறிது நேரத்தில் ராகேஷுக்கு கடத்தல்காரர்களிடம் இருந்து போன் வந்தது. அதில், மகன்களை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் 50 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என மிரட்டினர்.

    இதையடுத்து, கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தது. பணம் வராத ஆத்திரத்தில் கடத்தல்காரர்கள் அவரது மகன்களை உயிருடன் கொளுத்தினர். இதில் பிரியனேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். திவ்யனேஷ் படுகாயம் அடைந்தான்.

    ராகேஷுக்கு வந்த போன் அழைப்பை வைத்து போலீசார் கடத்தல்காரர்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்க்ளை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். அதன்பின் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட திவ்யனேஷ், லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    விசாரணையில், ஹரிஓம், ரகுவர், ஷிவ்புஜன் மற்றும் சூரஜ் ஆகிய 4 பேர் கடத்தல்காரகள் என்பதும், அவர்களில் ரகுவர் ராகேஷ் வீட்டு வேலையாள் என்பதும், சிறுவர்களை கடத்தி பணம் பறிப்பதற்கு முக்கிய காரணமாகவும் அவன் இருந்தான் என்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சிறுவன் பிரியனேஷ் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    50 லட்சம் ரூபாய் பணம் தராததால் கடத்தப்பட்ட 6 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்றது உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. #Sultanpur #Kidnappers #kill6yearoldboy #Abductingforransom
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் சன்திலா - உமர்தலி வழியே வந்த ரெயில், தண்டவாளத்தில் பணியில் இருந்த 3 பேர் மீது மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #TrainAccident #UttarPradesh
    லக்னோ:

    கொல்கத்தா - அமிர்தசரஸ் இடையே இயக்கப்படும் அகல் டக்த் எக்ஸ்பிரஸ் இன்று நண்பகல் நேரத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சன்திலா - உமர்தலி இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தின் சீரமைப்பு பணியில் இருந்த 3 ஊழியர்கள் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். மேலும், விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



    உயிரிழந்த 3 ஊழியர்களும் எவ்வித தடுப்புகளோ, முன்னறிவிப்போ அளிக்காமல் இருந்ததாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TrainAccident #UttarPradesh
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் நகரில் உள்ள ராசுல்பூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் துரிதமான மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த விபத்தினால் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கிடங்குகள் மற்றும் விற்பனை கூடங்களின் பாதுகாப்பு குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #UP #Accident
    லக்னோ:

    நேபாளத்தின் சிந்தூலி மாவட்டத்தில் இருந்து வாரணாசிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுற்றுலா வந்திருந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராஜதேபூர் கிராமம் வழியே கார் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #UP #Accident
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Lightning
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உ.பி.யின் ஷாஜஹான்பூர் பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மின்னல் தாக்கி பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். #UPRain
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    மழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே 5 பேர் பலியாகினர். மேலும், தண்ணீரில் மூழ்கி 5 வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

    கடந்த இரு தினங்களாக பெய்த மழைக்கு உ.பி.யில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UPRain
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மகள் மாற்று ஜாதி இளைஞரை காதலிப்பதை அறிந்த தந்தை, தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ப் பிஹ்ரா பகுதியில் உள்ள தவுலத்ப்பூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் தட்டாராம். இவரது 21 வயது மகளான பூஜா வேற்று ஜாதி இளைஞரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு தட்டாராம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே, பூஜா நீதிமன்றத்தை நாடியுள்ளார். தங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறு பூஜா நீதிமன்றத்தில் மனு அளிக்க அதனை வாபஸ் பெருமாறும், காதலை கைவிடுமாறும் தந்தை தட்டாராம் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பூஜாவின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த தட்டாராம், பூஜாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக, பூஜாவின் தாயார் புகார் அளிக்கவே கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தட்டாராமை சிறையில் அடைத்துள்ளனர்.

    ஜாதி மோகம் அழிந்துவிட்டதாக இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில், ஜாதி வெறியால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விரைவில் துணைவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்ய வந்தேன் என பெண் துறவி சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார். #SadhviPrachi #RahulGandhi
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் அமைந்துள்ளது கோரக்நாத் கோவில். இந்த கோவிலுக்கு நேற்று இந்துத்துவா தலைவர் சாத்வி பிராச்சி வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அவர்களிடம் சாத்வி பிராச்சி பேசுகையில், நான் எப்போதும் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு சிறப்பு பிரார்த்தனைக்காக வந்துள்ளேன்.

    மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் பெறவில்லை. எனவே, ராகுலுக்கு விரைவில் நல்ல துணைவியாவது கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கவே இப்போது வந்துள்ளேன் என கூறினார்.



    காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு துணைவி கிடைக்க வேண்டும் என பெண் துறவி வேண்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து, உ.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங் கூறுகையில், பிரபலமானவர்களை பற்றி கருத்து கூறுவது தற்போது இது டிரெண்டாக உருவாகி வருகிறது.

    சாத்வி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார். இது அருவருக்கத்தக்க செயல் என தெரிவித்தார். #SadhviPrachi #RahulGandhi
    உத்தரப்பிரதேசத்தில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகளை பதிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது களிமண் சரிந்தௌ விழுந்ததில் 5 பேர் பலியாகினர். #Accident
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிலிபிட் பைபாஸ் சாலையில் தொலைபேசிக்கான கண்ணாடி இழைகள் போடப்படும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், நேற்று இரவு சில தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக பள்ளம் தோண்டிய களிமண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் களிமண்ணில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கு மேற்பார்வை செய்த சூப்பர்வைசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொலைபேசி இணைப்புக்காக பள்ளம் தோண்டியபோது களிமண் சரிந்து விழுந்து 5 தொழிலாளிகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×