என் மலர்
நீங்கள் தேடியது "vadapalani"
- வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
- செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பு.
வைத்தீஸ்வரன் கோவிலில், செவ்வாய் பகவானைத் தை மாத செவ்வாய்களிலும், குறிப்பாக தை மாத கடைசி செவ்வாயில், செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பாகும். மேலும் செவ்வாய் பகவான் உச்சம் பெறும் தை மாதம், ஆட்சி பெறும் சித்திரை, கார்த்திகை மாதங்களில், செவ்வாயின் நட்சத்திரகளாகிய மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் வரும் செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம்.
செவ்வாய் ஓரையில் செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை வழிபட்டு பரிகாரம் செய்வது மிக மிகச்சிறப்பாகும்.
ஹோம பலன்
உத்திராடம், உத்திரட்டாதி, உத்திரம்-இந்த நட்சத்திரங் களில் ஸ்ரீமகாலட்சுமியை ஆவாகானம் செய்து ஆயிரம் நந்தியாவட்டை மலர்களால் ஹோமம் செய்து ஐஸ்வர்யம் நிலையாய் இருக்கும் பெளர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.
பஞ்சமி திதியிலும், வெள்ளிக்கிழமையிலும் வாசனை புஷ்பத்தால் ஹோமம் செய்ய ஒரு வருடத்திற்குள் அனைத்து சம்பத்துக்களையும் அடைந்து செல்வந்தனாவான்.
விஷ்ணு பரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி
பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா? அதில் இருப்பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி, வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி, பச்சை நிற முடைய பரீதி தேவி, சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி, மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி, பச்சை நிறமுடைய புஷ்டி தேவி, என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.
இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும், கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.
வடபழனி
சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.
செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீதுர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.
செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் ஏற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு. பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பை தரும்.
- சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
- விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.
சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணமான சமையல் காண்ட்ராக்டர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
- மனவேதனை அடைந்த இளம்பெண் இதுபற்றி புகார் அளிக்க வடபழனி போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
போரூர்:
வடபழனி, பகுதியை சேர்ந்த 35வயது இளம்பெண் கிளப்பில் நடனமாடி வருகிறார். இவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான சமையல் காண்ட்ராக்டர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
அவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண், தனது கள்ளக்காதலன் சமையல் காண்டிராக்டரிடம்வற்புறுத்தினார்.
ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்தார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் இதுபற்றி புகார் அளிக்க நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது பணியில் இருந்த போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறினர். எனினும் சமாதானம் அடையாத இளம்பெண் திடீரென தனது மோட்டார் சைக்கிளில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு போலீஸ் நிலையம் முன்பு நின்ற படி"தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் அவரது கணவரை வரவழைத்த போலீசார் இளம்பெண்ணை எச்சரித்து அவருடன் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வரும் 29-ந்தேதி வரை நடக்கும் விழாவில் மங்களகிரி விமானம், சூரியபிரபை, சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, நாகம், யானை, குதிரை, மயில் வாகனங்கள் மற்றும் புஷ்ப பல்லக்கில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகர் காலை 7 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 15-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 17-ந்தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது.
அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 20-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இதனையொட்டி தினசரி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. குறிப்பாக தினசரி மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தெய்வீக பாடல், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் முதல் நாள் அதாவது 20-ந்தேதி இரவு 7 மணிக்கு வீரமணி ராஜூவின் தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், உதவி ஆணையர் கே.சித்ராதேவி ஆகியோர் செய்து வருகின்றனர்.
போரூர்:
வடபழனி குமரன் காலனி 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 51). ஆதம்பாக்கத்தில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.
மகேஸ்வரி நேற்று மாலை தனது பயிற்சி வகுப்பில் வசூலான பணம் மற்றும் நகைகளை அடமானம் வைத்து பெற்ற பணம் என மொத்தமாக சேர்த்து ரூ.2 லட்சத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் கைப்பையை வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்த மகேஸ்வரி கைப்பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். வெளியே ஓடி வந்து பார்த்தபோது கைப்பை மட்டும் கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ.2லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து வடபழனி போலீசில் மகேஸ்வரி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலுசாமி வழக்குப் பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
போரூர்:
மாங்காடு மேல்மாநகர் அம்மன்முருகன் நகரைச் சேர்ந்தவர் ருக்குமணி (75).
கடந்த டிசம்பர் மாதம் இவர் கோயம்பேட்டில் இருந்து வடபழனிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது ருக்குமணி அணிந்திருந்த 5 சவரன் செயினை உடன் வந்த பெண்கள் திருடி சென்றது தெரிந்தது.
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் புலியூர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜீனத் (53). அவர் கடந்த 1-ந் தேதி பூந்தமல்லியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். பஸ் வடபழனி கோவில் அருகே வந்தபோது தான் அணிந்திருந்த 6 சவரன் செயின் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார் உதவி கமிஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி தலைமையில் தனிப்படை அமைத்து தங்க சங்கிலியை திருடிய பெண்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைத்து முத்தம்மாள் (29), முத்துமாரி (37) ஆகிய பெண்களை தனிப்படை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதில் தொடர்புடைய மீனாட்சி மற்றும் கூட்டாளிகளான மூன்று பெண்களை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் மதுரை கடச்சநேந்தல் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த கும்பல் தனியாக பஸ்சில் வரும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து அவர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் மீது விருகம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, வேலூர், மதுரை ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. பெண் கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை போலிசாரை கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டினார்.
சென்னை:
வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விடுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் சூதாட்டம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அபுசுசியான், பெரியசாமி, வெங்கலியான், சதிஷ்குமார், சபீர், தமிம் அன்சாரி உள்ளிட்ட 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வடபழனியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர்களான மோகன், மாணிக்கம் ஆகியோர் கடந்த மாதம் 23-ந்தேதி காரில் கடத்தப்பட்டனர்.
2 பேரையும் கத்திமுனையில் மிரட்டி பங்களாவில் அடைத்து வைத்த கும்பல் ரூ.33 லட்சம் பணம் மற்றும் 28 பவுன் நகைகளை பறித்தது.
இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வடபழனி உதவி கமிஷனர் சங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பசுபதி, மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கடத்தல் வழக்கின் குற்றவாளிகளான செல்லப்பாண்டி, சுதீர்குமார், நந்த குமார், சேக்தாவூத், சீனிவாசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன், வினோத் ஆகியோர் சைதாப்பேட்டை கோர்ட்டிலும், சரவணகுமார் அம்பத்தூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.
இவர்கள் 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது 3 பேரிடமிருந்தும் ரூ.28 லட்சம் பணம், 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கத்திகளும் கைப்பற்றப்பட்டன. #Tamilnews