என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vastu"

    • குபேர மூளை என சொல்லப்படும் தென்மேற்கு பகுதி உயரமாக இருக்க வேண்டும்.
    • வடக்கு பார்த்த வாசல் அல்லது கிழக்கு பார்த்த வாசல் இருப்பது நலம்.

    வாஸ்து சாஸ்திரப்படி வீடு மற்றும் பணி புரியும் இடம் இருப்பது நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்தது. பலரும் இப்போது கேட்கின்ற கேள்வி, வாஸ்து பற்றின பொதுவான விதிகளை சொல்லுங்கள் என்பதே!

    வாஸ்து பொதுவான விதிகள்:-

    குபேர மூளை என சொல்லப்படும் தென்மேற்கு பகுதி உயரமாக இருக்க வேண்டும். அந்த மூலையில் கனமான பொருட்களை வைக்கலாம். அந்த மூலையில் சாளரம் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் புழங்கும் இடமாக, விலை உயர்ந்த பொருட்களை வைக்க கூடிய இடமாக இந்த தென்மேற்கு மூலை இருக்கும்.

    ஈசான மூலை என சொல்லப்படும் வடகிழக்கு பகுதி சற்றே தாழ்வாக இருந்தாலும் பரவாயில்லை. வளர்ந்திருப்பது நன்மை. கனமான பொருட்களை இங்கே வைக்கக் கூடாது. இறைவன் உறையும் இடம் என்பதால் சுத்தமாக இருக்க வேண்டும். நறுமணம் தரும் பொருட்களை இங்கே வைக்கலாம்.

    வீட்டின் தலை வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும்

    வடக்கு பார்த்த வாசல் அல்லது கிழக்கு பார்த்த வாசல் இருப்பது நலம். வீட்டுமனையும் அதில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் சதுர வடிவம் அல்லது செவ்வக வடிவமாக இருப்பது சிறப்பு. அவ்வாறு கட்டும் போது வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் காலியிடம் விட்டு கட்டலாம். குழந்தைகள் விளையாடுவதற்கும் வயதானவர்கள் மாலை நேரங்களில் நடப்பதற்கோ வாகனங்களை நிறுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தென்கிழக்கு பகுதியான அக்னி மூலையில் சமையலறை இருக்க வேண்டும். கிழக்கை நோக்கி பார்த்த வண்ணம் சமையல் செய்பவர்கள் நின்று சமையல் செய்யும்படி சமையல் மேடை இருப்பது நலம். வாயு மூளை என சொல்லப்படும் வடமேற்கு மூளையில் குளியலறை மற்றும் கழிவறைகள் வைக்கலாம்.

    • வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது.
    • வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது. அப்படி அமையாத வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * பசு நெய் அல்லது நல்லெண்ணெயால் தினமும், மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

    * வீட்டை தினமும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    * வீட்டில் தினமும் வாசனை திரவியங்கள், சாம்பிராணி, தூபம் போட்டு வர வேண்டும்.

    * சங்கு, மயில் இறகு போன்ற பொருட்களை வீட்டில் வைக்கலாம்.

    * வீட்டு முன் வாசலில் எலுமிச்சைப் பழம், பச்சை மிளகாய் போன்றவற்றை கட்டி தொங்க விடலாம்.

    * ஒரு குவளையில் நீர் வைத்து, அதில் எலுமிச்சைப் பழத்தை போட்டு வைக்கலாம்.

    * வீட்டின் நான்கு பக்கங்களிலும் கண்ணாடி அல்லது பீங்கான் குவளையில் கல் உப்பு போட்டு வைக்கவும். வாரம் ஒரு முறை உப்பை மாற்றவும். பழைய உப்பை வாஷ்பேஷனில் கொட்டிவிடவும்.

    * தோஷம் உள்ள இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கவும்.

    * வீட்டில் கணபதி ஹோமம், வாஸ்து தோஷம் செய்யலாம்.

    * வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.

    * வாசல் படிகளில் மஞ்சள், குங்குமம் இட வேண்டும். தலைவாசலில் மாவிலை கட்டி தொங்க விடலாம்.

    * வீட்டில் துளசி மாடம் அமைப்பது நல்லது. அதனை தினமும் நல்ல முறையில் பராமரித்து வழிபட வேண்டும்.

    * ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வேளையில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.

    * வீட்டில் தெய்வீக சுலோகங்கள், இறைவனின் நாமங்கள், மந்திரங்களை ஒலிக்க விடலாம்.

    • கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது.
    • பெரிய கூண்டு கடிகார வாஸ்து பிரகாரம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    * காலம் பொன்னானது என்பதற்கு ஏற்ப அனைத்து வீடுகளிலும் கடிகாரம் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. மரத்தால் ஆன சாவி கொண்டு இயங்கும் மணியடிக்கும் பெரிய சுவர் கடிகாரங்கள் பண்டைய காலத்தில் வீடுகளில் உபயோகப்படுத்தப்பட்டது. நேரத்தை குறிக்கும் வண்ணம் மணி சத்தம் கேட்கும்.

    * அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சத்தமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எண்ணிக்கையின் நேரத்துக்கு ஏற்ப எண்ணிக்கையில் சத்தமும் கேட்கும் மரத்தினாலான பெரிய கூண்டு கடிகார வாஸ்து பிரகாரம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    * வாஸ்து என்பது இன்று அனைவரது வாழ்க்கையிலும் அனைத்து இடங்களிலும் பொருள்களிலும் மிக முக்கியமானதாக உள்ளது. கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது. எந்த கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை வாஸ்து பரிகாரம் கடைபிடித்தால் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதுடன் வீட்டில் நல்ல மாற்றங்களையும் தருகிறது.

    * வீட்டு கதவு முன்னால் கடிகாரத்தை தொங்கவிடுதல் கூடாது. வீட்டுக்குள்ளே வீட்டின் அறைகளுக்கு ஏற்றவாறு மரத்தாலான கடிகாரங்களை உபயோகிப்பது மிகவும் நல்லது. அலங்கார கண்ணாடியாலான அலங்கார கடிகாரங்களையும் உபயோகிக்கலாம்.

    • வாசற்படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும்.
    • ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது நல்லது.

    தெய்வீகத் தன்மை வாய்ந்த நேர்மறை சக்திகள் நம் வீட்டுக்குள் நுழைந்து நிரந்தரமாக தங்கி நமக்கும் நமது பிற்கால சந்ததியினருக்கும் எல்லாவிதமான நன்மைகளையும் ஏற்படுத்தி நிறைவான வாழ்க்கையை வாழ உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்

    ஒருவரது வீட்டில் எப்போதும் நேர்மறையான ஆற்றல்கள் தங்கியிருக்க வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினத்தன்றும் வீட்டு வாசற்படியை சுத்தம் செய்து, அந்த வாசற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வருவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் இப்படி செய்வதால் செல்வ மகளான லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கி, அந்த வீட்டில் நிறைவான செல்வம் இருக்கும்படி வழிவகை செய்வாள்

    வீட்டின் முன்பாக நிலை வாசற்படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த வீட்டிற்குள் நுழைய முயல்கின்ற எதிர்மறை ஆற்றல்களை அந்தப்படிகாரக்கல் ஈர்த்துக் கொண்டு நாம் வாழும் வீட்டை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும்.

    ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது அந்த வீட்டிற்கு இருக்கின்ற வாஸ்து குறைகளை போக்குவதோடு வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் காக்கிறது. அதிலும் அந்த விநாயகர் சிலை வெள்ளருக்கு மரக்கட்டையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையாக இருந்து அந்த வெள்ளெருக்கு விநாயகர் சிலைக்கு தினம் மலர் சாற்றி தீப தூபம் காட்டி வருவதால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் சுவர் அல்லது கதவில் செம்புக் கம்பியால் செய்யப்பட்ட "ஓம்" என்கிற பிரணவ மந்திர வடிவத்தை மாட்டி வைப்பதால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்

    சிவன் கோவில்களில் இருக்கின்ற பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்ற விபூதியை வாங்கி கொண்டு வந்து உங்கள் வீட்டின் வெளிப்புற வாயில் பகுதியின் இரண்டு புறமும் சிறிதளவு போட்டு வைப்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தீய ஆற்றல்களிடமிருந்து பாதுகாப்பை கொடுக்கும்

    உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற நிலை வாயில் கதவில் "சுவஸ்திக்" சின்னம் அல்லது "திரிசூலம்" சின்னத்தை வரைந்து வைப்பது நல்லது. முருகப்பெருமானின் ஆயுதமான "வேல்" சின்னத்தையும் வீட்டின் கதவுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு மேலாக இருக்கின்ற இடத்திலோ வரைந்து வைப்பது நல்லது. உங்கள் வீட்டின் நிலை வாசலில் இரண்டு புறமும் மஞ்சள் கிழங்கு மாலையை மாட்டி வைப்பது நேர்மறையான ஆற்றல்களை உங்கள் வீட்டுக்குள் நுழைய வழிவகை செய்யும்.

    உங்கள் வீட்டின் வாயிற்படியின் இரண்டு பக்கத்திலும் மரம் அல்லது மண் கொண்டு செய்யப்பட்ட யானை பொம்மைகளை வைப்பதால் மங்களகரமான பலன்கள் அந்த வீட்டில் இருப்பவர்களின் வாழ்வில் உண்டாகும். மேலும் வீட்டு நிலை வாசல் படியின் மேலாக ஒன்று அல்லது ஏழு குதிரைகள் இருக்கின்ற வகையான படத்தினை மாட்டி வைப்பது உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற செய்யும் குதிரை படம் இல்லாதவர்கள் வண்டி இழுக்கும் குதிரையின் காலில் இருந்து கழண்ட பழைய குதிரை லாடத்தை மாட்டி வைப்பதும் மேற்சொன்ன பலன்களை உங்களுக்கு தரும்.

    தாங்கள் வசிக்கின்ற வீடுகளில் ஏதாவது ஒரு குறையினால் பொருளாதார ரீதியான கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் மஞ்சளில் தோய்த்த ஒரு பருத்தித் துணியில் பூஜையறையில் பூஜை செய்யப்பட்ட ஒரு தேங்காயை எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் சிறிது நாணயங்களை வைத்து முடிச்சி போன்று கட்டி உங்கள் வீட்டு வாயிற்படியில் மேலாக கட்டி வைப்பதால் பணம் சம்பந்தமான பிரச்சினைகளில் உங்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

    • வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படும்.
    • எந்த மூலையில் குப்பையை வைக்கக்கூடாது என்று தெரிந்துக்கொள்வோம்.

    வீட்டைக்கூட்டி குப்பையை வீட்டில் இருக்கும் மூலையில் ஒதுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆம். அப்படி செய்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் என நம்புகின்றார்கள். ஆனாலும் அதை நம் காதில் எடுத்துக்கொள்வதில்லை. வீட்டைக்கூட்டி மூலையில் தான் வைப்போம்.

    வீட்டில் குப்பையை வைத்தால் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடங்கள் ஏற்படும்.

    அதுபோலவே வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படுமாம். அது எந்த மூலை என்று முதலில் தெரிந்துக்கொள்வோம்.

    நாம் வீடு கட்டும் போதே வாஸ்து பார்த்து கட்டுவது தான் வழக்கம். வீட்டில் இருக்கும் படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கதவு என்பவைகளை வாஸ்து பார்த்து தான் கட்டுவோம்.

    அவ்வாறு கட்டினால் தான் வீட்டில் நன்மைகள் ஏற்படும். தென்கிழக்கு மூலையை தான் பொதுவாக அக்னி மூலை என்று கூறுவோம்.

    தென்கிழக்கு திசையில் தான் பொதுவாகவே சமையலறை அமைப்பார்கள். சமையலறை இருக்கும் இடங்களில் குளியலறை இருக்க கூடாது. அதாவது நீரை பயன்படுத்தி எதுவும் செய்ய கூடாது.

    அதுபோலவே தென்கிழக்கு மூலையில் குப்பைகளையும் ஒதுக்க கூடாது. அவ்வாறு செய்யதால் வீட்டில் சம்பாதிக்கும் பணம் நீடிக்காது.

    பணக்கஷ்டம், தொழிலில் கஷ்டம் மற்றும் குடும்பத்தில் பிரச்சினை என்பவை ஏற்படும். ஆகவே வீட்டில் இருக்கும் தென்கிழக்கு மூலையில் குப்பைகளை ஒதுக்கி வைக்க கூடாது என்பதை மறக்கக்கூடாது.

    • வீட்டு தோட்டத்தில் துளசி செடி இருப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
    • நெல்லி வளர வளர செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    அனைத்து வீடுகளிலும் செடிகள் மரங்கள் வைப்பது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. வீட்டின் கட்டமைப்புக்கு இடவசதிக்கு ஏற்றவாறு மரங்கள் சிறு செடிகள் கொடிகள் என்று தோட்டங்கள் பராமரிக்கப்படுகிறது. தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் காற்றோட்ட வசதியும் மனிதனின் உடலுக்கும் வீட்டிற்கும் பல நன்மைகளையும் தருகிறது.

    கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டும் வாஸ்து பார்க்காமல் செடி கொடிகள் வைப்பது தோட்டத்தை உருவாக்குவதற்கும் தோட்டத்தில் தாவரங்கள் நடுவதற்கும் வாஸ்து சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டும். பண்டைய கால முதலே எந்தெந்த செடிகள் வீட்டில் வளர்க்கலாம் எங்கு வளர்க்கலாம் எந்த திசை நோக்கி வைக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொண்டு தோட்டங்கள் வைப்பது சால சிறந்தது.

    உங்கள் வீட்டு தோட்டத்தில் துளசி செடி இருப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மல்லிகை, மா, பலா, எலுமிச்சை, பாதாம், அன்னாசி, மாதுளை மற்றும் வேப்பமரம் இவைகளை வளர்ப்பதும் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வேம்பும் மாதுளையும் மருத்துவ ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுகிறது.

    நெல்லி வளர வளர செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இவ்வகை தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. வீட்டின் உட்புறத்தில் ஜன்னல் ஓரங்களில் செடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமைவது நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள்ளே வருவதை ஜன்னல்கள் தடுக்கின்றன.

    வீட்டின் வெளிப்புறத்தில் முள் செடிகளை வளர்த்தல் நல்லது. சூரிய ஒளி தண்ணீர் வசதி உள்ள இடங்களில் தாவரங்களை வளர்ப்பது மிக முக்கியம்.

    வீட்டில் மா வாழை மரங்களை நடுவதும் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும் வீட்டில் மரங்களை நடும்போது வீட்டிற்கும் மரங்களுக்கும் நடுவில் இடைவெளி அதிகமாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் மரத்தின் வேர்கள் கட்டடத்தை பாதிக்காத வண்ணம் செடிகளை பராமரிக்கலாம்

    வீட்டை சுற்றி தோட்டங்கள் அமைக்கும் போது நேர்மறை ஆற்றலை உருவாக்கும் தாவரங்களை தேர்வு செய்து நடுவது மிக முக்கியம். அவைகளை எந்த திசை நோக்கி எந்த திசையில் வைக்கலாம் என்பதையும் தெரிந்து நடுவது நல்லது.

    வடக்கு திசைகளில் தோட்டங்கள் அமைப்பது சிறப்பானது. துளசி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும். பெரிய மரங்களை வீட்டில் நடுவதை கொஞ்சம் தவிர்க்கலாம். தோட்டங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது அவைகளை வடக்கு திசையில் வைத்து பேணிக்காப்பது நன்றாகும்.

    கிழக்கு திசை துளசி மற்றும் மரம் வைப்பதற்கு மிகவும் உகந்தது. அழகான பூந்தோட்டங்கள் கிழக்கு திசைகளில் அமைக்கலாம். குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல் கிழக்கு திசையில் கட்டலாம். கிழக்கு திசையில் பெரிய மரங்கள் வைப்பது தவிர்க்க வேண்டும். கிழக்கு திசையில் சிறிய நீரூற்றுகளை அலங்கரிக்கலாம். இவையெல்லாம் நேர்மறை ஆற்றலை தரும்.

    தெற்கு திசையில் தோட்டத்தை அலங்கரிக்கும் சிலை போன்ற தோட்ட கலை அமைப்புகளை உருவாக்கலாம். அசோக மரம் போன்ற உயரமான மரங்களை தெற்கு திசை நோக்கி வைத்தால் மிகவும் நல்லது. மல்லிகை சாமந்தி போன்ற பூச்செடிகளை தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் வளர்க்கலாம்.

    மேற்கு திசையில் ஆலமரம் மா போன்ற பெரிய மரங்களை நடுவதற்கு ஏற்றது. கலை அலங்காரப் பொருட்களும் மற்றும் நீரூற்றுகளையும் மேற்கு திசையில் அலங்கரிக்கலாம்.

    வீட்டுக்குள்ளேயும் மணி பிளாண்ட் போன்ற செடிகளை வளர்ப்பது பண வரவை அதிகரிக்கும். வீட்டை சுற்றி தோட்டங்களில் கற்றாழ ஓமவள்ளி வெற்றிலை கொடி போன்ற மூலிகை செடிகளையும் வளர்ப்பது வீட்டிற்கும் உடல் நலத்திற்கும் உகந்ததாகும்.

    • நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
    • தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது.

    நாம் வாழும் வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அது ஒருவரது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரி, வாஸ்து குறைபாடு உள்ள வீட்டை அறிவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

    நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது, வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும், பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய பண பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால், வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் குடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஒருசில பரிகாரங்களை வீட்டில் செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். இப்போது அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் கண்போம்.

    நீங்கள் செடி பிரியர் என்றால், வீட்டில் துளசி செடியை வாங்கி வளர்த்து வாருங்கள். குடியிருக்கும் வீட்டில் துளசி செடியை வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருக்கிறார். அதுவும் இந்த துளசி செடியை வீட்டில் பிரதான வாசலில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், வீட்டின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.


    பணப்பையை காலியாக வைத்திருக்காதீர் ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பை அல்லது பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருக்காதீர்கள். அப்படி வைத்தால், அது வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் பணம் வைக்கும் பையானது லட்சுமி தேவி இருக்கும் இடம். இந்த இடத்தை காலியாக வைத்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள். எனவே பணப்பையை காலியாக வைத்திருக்காதீர்கள்.

    ஜோதிடத்தின் படி, தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது. அதாவது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் நிரம்பிய வீட்டில் வாஸ்து தோஷம் எதுவும் இருக்காது. இதன் விளைவாக எவ்வித பணப் பற்றாக்குறையும் ஏற்படாது. எனவே வீட்டில் பணப் பிரச்சனை வரக்கூடாதெனில், தினமும் கற்பூரத்துடன், 1 கிராம்பை வைத்து ஏற்றி வீடு முழுவதும் அதன் புகையை காட்டுங்கள்.

    உங்கள் வீட்டில் பண பிரச்சனை அதிகமாக உள்ளதா? அப்படியானால் இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் ஒரு வெள்ளி நாணயத்தை வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், புதன் மற்றும் செவ்வாயினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இவ்விரு கிரகங்களின் தோஷங்களானது ஒருவருக்கு நிறைய கஷ்டத்தை தரும். முக்கியமாக பணப் பிரச்சனையால் அவதிப்பட வைக்கும். 

    • வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
    • வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

    வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம், நிதி மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

    வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க நாம் சில விசயங்களை செய்தால் தோஷங்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

    வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

    வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

    தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

    பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

    • இப்போதுள்ள நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எந்த விதமான மண்ணிலும் கட்டிடம் அமைக்க இயலும்.
    • மனைப்பகுதியில் தாமரைக்குளத்தின் வாசனை, மாட்டுத் தொழுவ வாசனை போன்றவை இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

    வீட்டு மனை அல்லது வயல், தோட்டம் வாங்கும்போது முதலில் கவனிக்க வேண்டியது, மனையில் மண்ணின் தன்மை என்ன என்பதுதான். மண் என்ன நிறத்தில் உள்ளது. என்ன மணம் வீசுகிறது. பாறைகளுடன் கூடியதா, சிறுசிறு கூழாங்கற்கள் உள்ள இடமா, சாதாரண மண் அமைப்பா, சதுப்பு நிலமா அல்லது பெரிய மரங்கள் இருக்கும் காட்டுப் பகுதியா என்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மனைப்பகுதியில் தாமரைக்குளத்தின் வாசனை, மாட்டுத் தொழுவ வாசனை போன்றவை இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

    வெளிர் நிறமண், சற்றே இள மஞ்சள், செம்மண், சற்றே கருப்பாக உள்ள மண், பழுப்பு நிற மண், விவசாயம் செய்த மண், அதிகமாகக் கூழாங்கற்கள் இல்லாதது ஆகியவை வீடுகள் கட்ட உகந்தவை. இடத்தின் மண்ணை எடுத்துத் தண்ணீர் தெளித்துவிட்டு சில மணி நேரம் கழித்துப் பார்க்கும்போது நுரையாக இருந்தால் பொருளாதார வளம் கொண்ட மண் அமைப்பாகவும், தயிர் வாசனை வீசினால் சமமான வாழ்வு தரும் மண் அமைப்பாகவும், தேன் வாசனை வீசினால் முன்னேற்றமான வாழ்வு தரும் மண் அமைப்பாகவும் கருதலாம். நெய் வாசனை, மீன் வாசனை முதலியவை குறைந்த பலன்களைத் தரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

    இப்போதுள்ள நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எந்த விதமான மண்ணிலும் கட்டிடம் அமைக்க இயலும். இப்போது நடைமுறையில் உள்ள மண்ணின் பளு தாங்கும் திறன் சோதனை (LOAD BEARING CAPACITY TEST) மூலமாக நாம் அமைக்கும் கட்டிடத்தின் அளவுகளையும், உயரங்களையும் எளிதாக முடிவு செய்யலாம். பெரும் நீர்ப்பரப்பான கடலில் கூட உணவகங்கள், விமான ஓடுதளங்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்திற்கான பாலங்கள் முதலியன தற்போது அமைக்கப்பட்டு உள்ளன.

    பழைய காலங்களில் நமது வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் மண்ணின் வலு மற்றும் அதன் சாதகமான அம்சங்களைத் தெரிந்துகொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டுள்ளனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடத்தின் மையத்தில் ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம் உடைய ஒரு குழி பறிக்க வேண்டும். வெளியே எடுக்கப்பட்ட மண்ணை மீண்டும் அந்தக் குழிக்குள் போட்டுக் குழியை மூடினால், மூடப்பட்டது போக மண் மீதியாக இருந்தால் அந்த நிலம் கட்டிடம் அமைக்க உத்தமமான இடமாகும். மீதம் எதுவும் இல்லாமல் மூடப்படுவதற்கு மட்டுமே மண் சரியாக உள்ள நிலம் மத்திமமான இடமாகும். வெட்டப்பட்ட குழியில் வெட்டிய மண்ணைப் போட்டு மூடிய பிறகும் குழியானது நிரம்பாமல் இருந்தால், அந்த நிலமானது அவ்வளவு சரியானதல்ல என்பது முன்னோர்களின் கணிப்பு.

    மேலும் இடத்தின் மையத்தில் ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் குழி எடுத்து, அதில் சுத்தமான நீரை நிரப்பி வைத்து விட்டு 12 மணி நேரம் கழித்து வந்து பார்க்கும்போது, குழியிலுள்ள நீர் பாதிக்கும் மேலாக இருந்தால் அது நல்ல நிலமாகவும், நீரானது பாதிக்கும் குறைவாக இருந்தால் மத்தியமான நிலமாகவும், சுத்தமாக நீரே இல்லாமல் இருந்தால் அது அவ்வளவு சரியாக வராது என்றும் முடிவு செய்தார்கள். அவ்வாறு வெட்டப்பட்ட குழியில் சுத்தமான நீரை, ஒரு சுப ஹோரையில் நிரப்பிய பின்பு அதில் மலர்களைப் போடவேண்டும். அவ்வாறு நாம் போட்ட மலர்கள் வலமாகச் சுற்றினால் அதாவது கடிகாரமுள் சுற்றுவது போலச் சுற்றினால், அம்மனையில் நல்ல சக்திகள் ஆட்சி செய்கின்றன என்றும், அவ்வாறு போடப்பட்ட மலர்கள் இடமாகச் சுற்றினால், அம்மனையில் சுபமான சக்திகள் அவ்வளவாகப் பலம் பெறவில்லை என்றும் பொருள்.

    சரியான முடிவுகள் கிடைக்கப்பெறாத நிலங்களை ஆராய்ந்து பார்த்த அக்கால வாஸ்து சாஸ்த்திர நிபுணர்கள், அந்த நிலங்களின் பஞ்சபூத விகிதாச்சாரங்களில் ஏற்பட்ட குற்றம் குறைகளை, அதனதன் தன்மைக்கேற்ற விதங்களில் நிவர்த்தி செய்த பின்பே கட்டிட வேலைகளை தொடங்கி நல்ல விதமாகக் கட்டி முடித்தார்கள்.

    • தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும்.
    • கீழ்கண்ட வாஸ்து முறைகளை கடைபிடித்தால் வெற்றி பெறலாம்.

    வியாபாரம், தொழில் நிறுவனங்களில் கீழ்கண்ட வாஸ்து கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றி பார்ப்போம்:-

    பூஜை இடம்: கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.

    வாசற்படி: கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும் கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.

    கதவுகள்: கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.

    கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.

    மேற்கு பார்த்த கடை : வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கைபுறம் பணபெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணபெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக்கூடாது.

    வடக்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.

    • வாஸ்துவில் திசைகள் என்பது மிக மிக முக்கியமானது.
    • மீன் தொட்டியை எந்த திசையில் வைப்பது நல்லது என்று பார்க்கலாம்.

    வாஸ்து என்பது வேத கால அறிவியல். வாஸ்து முறைப்படி வீடு அமையாவிட்டால் ஏற்படும் துன்பங்களை சரி செய்வதற்கு பல வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று வீட்டில் மீன் வளர்ப்பது. மீன்கள் தீய அதிர்வுகளை தனக்குள் இழுத்து வெளியேற்றும் ஆற்றல் உண்டு. இனி வீட்டில் மீன் தொட்டியை எங்கு வைப்பது, அதில் என்னென்ன வாஸ்து மீன்கள் வளர்க்கலாம், அதனால் அடையும் பயன் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

    வீட்டின் வரவேற்பறையில் தென்மேற்கு மூலையில் மீன் தொட்டியை வைப்பது சிறப்பு . வாஸ்துவில் திசைகள் என்பது மிக மிக முக்கியமானது. மீன் தொட்டி வீட்டை அலங்கரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. விருந்தினர்களின் மகிழ்ச்சியை கூட்டுகிறது. மீன்களுக்கு உணவிடும் போது நம் கர்மாவை கழிப்பதோடு மன அமைதியை அளிக்கிறது. மீன்கள் வீட்டில் மட்டும் அல்ல பள்ளிகள், அலுவலகங்களிலும் வளர்க்கலாம்.

    வீட்டில் வளர்க்கும் வாஸ்து மீன்கள் பற்றி பாப்போம்.

    டிராகன் மீன் (Dragon Fish)

    டிராகன் மீன் வாஸ்து மீன்களில் முதன்மையானது மற்றும் வாஸ்து மீன் தொட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான மீனாகும். வாஸ்து மீன்களிலேயே மிகவும் விரும்பப்படும் மீனாகும். இதை வீட்டில் வளர்த்தால் அதிகாரம், வளமை, மகிழ்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் தருக் கூடிய ஆற்றல் உள்ளது. இது மற்ற மீன்களை விட விலை உயர்வானது.

    கோல்ட் மீன் (Gold Fish)

    கோல்ட் மீனும் டிராகன் மீனுக்கு இணையானது. இது விலையும் குறைவு; அதிக எண்ணிக்கையில் வளர்க்கப் படும் மீனாகும். இந்த வாஸ்து மீன் அழகு மற்றும் நல்லிணக்கத்தின் வடிவமாகும். இது வீட்டில் வளர்க்கும் போது குடும்பத்தில் நல்லிணக்கத்தை உண்டு பண்ணக்கூடியது. கோல்ட் மீன்களை பார்க்கும் போதே மனக் கவலைகள் பறந்து போகும்; மனதில் அமைதி பிறக்கும்.

    பிளாக் மூர் (Blackmoor)

    கட்டாயம் வாஸ்து மீன் தொட்டியில் இந்த பிளாக் மூர் இருப்பது மிகவும் முக்கியம். காரணம் வாஸ்து மீன்களை வளர்ப்பதே தீய சக்திகளை வெளியேற்றத் தான். பிளாக் மூர் தீய சக்திகளை இழுத்துக் கொண்டு நல்ல சக்திகளை வெளியிடக் கூடியது. இந்த மீன் வீட்டில் இருந்தால் நல்ல சக்திகள் வீடு முழுவதும் பரவி இருக்கும் என்பது உறுதி.

    பட்டர்ப்ளை கொய் (Butterfly Koi)

    பட்டர்ப்ளை கொய் கடுமையான நீரோட்டத்தை எதிர்த்து நீந்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இது வெற்றி மற்றும் சாதனைகளின் வடிவமாகும். உங்கள் வீட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருந்தால் நிச்சயம் இந்த மீன் வீட்டில் இருக்க வேண்டும். இம்மீனை அவர்கள் பார்க்கும் போதெல்லாம் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்கள் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை. குடும்பத்தில் உள்ளளவர்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும் இந்த பட்டர்ப்ளை கொய் மீன்.

    பிலோவேர் ஹார்ன் மீன் (Flower Horn Fish)

    அழகு என்றால் அது பிலோவேர் ஹார்ன் மீன் தான்.இந்த மீன் அதிர்ஷ்டத்தையும் அன்பையும் ஒன்றாகத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு ஆரோக்கியத்தையும் தரும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை சந்திப்பவர்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும். எனவே வீடிற்கு வரும் விருந்தினர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள், இதனால் உறவுகள் மேம்படுவதோடு, கிளைத்து வளர்வதும் உறுதி.

    ஒரு வாஸ்து மீன் தொட்டியில் குறைந்தது 9 வாஸ்து மீன்களாவது இருக்க வேண்டும். அதில் 8 மீன்களில் மேலே சொன்ன 5 மீன்கள் இடம் பெற வேண்டும். இவற்றில் பிளாக் மீன் (Black Fish) இடம் பெறலாம், இடம் பெறாமலும் இருக்கலாம்.

    வாஸ்து மீன்கள் வளர்ப்பதால் பெரும் நன்மைகள்.

    மீன் தொட்டி தீய சக்திகளை இழுத்துக் கொண்டு நல்ல சக்திககளை உற்பத்தி செய்கிறது. மிகவும் உற்சாகமான ஆரோக்கியமான மீன்கள் அபரிமிதமான செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும் ஈர்க்க உதவும்.

    நீங்கள் பசியோடு உள்ள மீன்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் புண்ணியம் வந்து சேரும்.

    மீன் தொட்டியை வேடிக்கை பார்ப்பது, நண்பர்களோடு பழகுவது போன்றதாகும்; அவை உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள மிக மிக உறுதுணையாக இருக்கும்.

    உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் அது தொடர்பான திசையில் மீன் தொட்டி வைத்தால் அந்த பிரச்சனை விலகும்.

    இறுதியாக, மீன் தொட்டி உங்கள் வீட்டை அழகாகவும் அற்புதமாகவும் ஆக்கும் என்பது உறுதி.

    நாள் முழுவது உழைத்து களைப்போடு வீட்டில் நுழைந்ததும் ஓடி விளையாடும் குழந்தைகளைப் பார்ப்பது போல அங்கும் இங்கும் நீந்தும் இந்த மீன்களை பார்த்தால் உடல் மன களைப்பு பறந்து போவது உறுதி. இவ்வளவு நன்மைகளை அளிக்கும் வாஸ்து மீன்களை நம் வீட்டில் வளர்த்து நன்மையையும் மகிழ்ச்சியும் அடைவோம்.

    • சமையலறையில் வடகிழக்கில் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும்.
    • தென்கிழக்கில் வீட்டின் பெரிய படுக்கையறை வேண்டாம்.

    சமையலறையில் கட்டாயம் பாத்திரம் கழுவும் தொட்டி சிங் அமைக்க வேண்டும். இது சமையலறையில் வடகிழக்கில் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும்.

    மாவு அரைக்கும் கிரைண்டர் பிரிட்ஜ் போன்றவை தென்மேற்கில் வைக்கலாம். சமையலுக்கு தேவைப்படும் மசாலா மளிகை பொருட்களை அடுக்கி வைக்கும் மாடத்தை அறையில் தெற்கு மேற்கு பக்கம் அமைக்கலாம். சமையல் அரை மேடை மேல் கருப்பு வண்ணம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். தென்கிழக்கு பகுதி சுக்கிரன் ஆட்சி பெற்ற பகுதி என்பர். எனவே சுக்கிரனுக்கு உகந்த வெளிர்மஞ்சள் ஐஓரி வண்ணத்தை சமையலறை சுவர்களுக்கு தீட்டலாம்.

    சுக்கிரன் ஆட்சி உச்சம் ஜாதகத்தில் உடையவர்கள் வீட்டில் சமையலறையில் பூஜை அறையும் வைக்கலாம்.

    அக்னி மூலையில் பொதுவாக நீர் தொட்டி கழிப்பறை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தென்கிழக்கில் வீட்டின் பெரிய படுக்கையறை வேண்டாம். அதற்கு பதில் விருந்தினர்கள் தங்குமரை வைக்கலாம்.

    ×