என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veeralakshmi"

    • தவெக பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
    • சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார்.

    தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரம் முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.

    பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது.

    சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சிகளில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளி தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்து வழங்குவார் என கூறினார்.

    சுசித்ராவின் குற்றச்சாட்டிற்கு விஜய் அமைதியாக இருக்கிறார். காவல் துறையும் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்?

    இப்படி ஒரு சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து போதைப் பொருள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.
    • ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார்.

    நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வருகிறார். இரு சமூகங்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டும் வகையிலும் தெலுங்கு மொழி பேசும் பெண்களை இழிவுவாக பேசி தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.

    நடிகை கஸ்தூரி சத்தியராஜ் படம் அமைதிப்படையில் தாயம்மாவாக நடித்தபோது இதுபோன்ற கருத்துக்களை பேசி இருந்தால் ஒரு பொண்ணு பேசுது என்று காது கொடுத்து கேட்டு இருப்பார்கள்.

    நீ இப்போ ஆயம்மாவாக ஆனபின்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்களும் தமிழர்களும், சகோதர சகோதரிகளாக, ஒரு தாய் மக்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

    ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார்.

    ஈழத்தில் 1 1/2 லட்சம் மக்களை கொன்று குவித்தபோதும், பெண்கள் கற்பழிக்கப்பட்டபோதும், குழந்தைகள் கொன்று குவித்தபோதும் நடிகை கஸ்தூரி என்ன செய்துகொண்டிருந்தார்.

    உரிமைகளுக்காக போராடாத நீ தமிழச்சியா?

    கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டபோது, அண்டை மாநிலத்தவர் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்தபோது இந்த மண்ணில் தமிழர்களாகிய நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கோடு தெலுங்கு பேசும் மக்களும் களத்தில் நின்று போராடி சிறைக்கு போகிறார்கள்.

    சீமான் அண்ணன் தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசியதற்காக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சீமான் கருத்து போல் தான் நடிகை கஸ்தூரியும் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    சீமான் கருத்தும் நடிகை கஸ்தூரி கருத்தும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

    சீமானுக்கு கஸ்தூரி கிளாஸ்மேட்டா (Classmate) இல்லை glassmate...

    சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளோம்.

    பிரிவினை வாதத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளோம்.

    நடிகை கஸ்தூரி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரலட்சுமி, "ஒரு நடிகை என்னிடம் கூறிய அந்தரங்க தகவல்களை எல்லாம் நான் கூறினால் சீமான் எவ்வளவு பெரிய காம கொடூரன் என்று சொல்லி அவர் பின்னல் நிற்கும் பெண்களே காரி துப்புவார்கள். நடிகைக்கு போதைப்பொருட்கள் கொடுத்து அவர் சுயநினைவு இல்லாத நேரத்தில் பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியுள்ளார்.

    சீமான் குறித்த விபரங்களை வெளியிட்டால் பெண்களே அவரை அடித்து துரத்துவர். சீமானுக்கு பெண்கள் உரிமைக்காக போராட எந்த உரிமையும் இல்லை. வதந்திகள் பரப்புவதை சீமான் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.
    உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.

    யாதேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண
    ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

    அனைத்து உயிரினங்களிலும் தைரிய வடிவினளாய்த் திகழும் வீரலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
    ×