என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vignesh Shivan"

    • இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து நயன்தாரா- விக்னேஷ் தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி உள்ளனர். சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை ஸ்டுடியோவாக மறுகட்டமைபு செய்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரும் வியக்க வைத்தது.

    இதனிடையே, நயன்தாரா தற்போது 'டெஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படி நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் தொடர்பான வீடியோவையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து வழிபாடு செய்தார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். இதன்பின் கோவிலின் கலைநயத்தை புகைப்படம் எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    • 7000 சதுர அடியில் சுமார் 100 கோடி செலவில் 3 தளங்களுடன் கலைநயத்தோடு ஸ்டூடியோ போன்று வீட்டை உருவாக்கி இருக்கிறார்.
    • வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.

    தமிழ், திரை உலகில் பிரபல கதாநாயகியான நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன்-2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    சினிமா நடிப்பை விட குடும்பத்திற்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வரும் நயன்தாராவுக்கு போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்பது பல வருட கனவு. அந்த கனவு ஒரு வழியாக சில வருடங்களுக்கு முன்பு நிறைவேறி இருக்கிறது.

    பெரும் தொகை கொடுத்து போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டை நயன்தாரா இடித்து விட்டு தனது கனவுபடி அங்குலம் அங்குலமாக அழகாக வடிவமைத்து ரசித்து கட்டி இருக்கிறார். 7000 சதுர அடியில் சுமார் 100 கோடி செலவில் 3 தளங்களுடன் கலைநயத்தோடு ஸ்டூடியோ போன்று வீட்டை உருவாக்கி இருக்கிறார்.

    வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர். சினிமாவை மிஞ்சும் வகையில் பழங்கால பொருட்கள், தோட்டம், அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்போடு வீட்டை உருவாக்கி இருக்கின்றனர்.

    முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2-வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு தனி அறை என கண்களை கவரும் கனவு இல்லமாக கட்டி இருக்கிறார் நயன்தாரா.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
    • இவர்கள் இருவரும் 2016-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.


    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.


    இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


    இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.


    இந்நிலையில், இன்று விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் முறையாக குழந்தை பெற்றுள்ளதாகவும் எந்தவொரு விதிமீறலிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


    அதுமட்டுமல்லாமல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த சான்றிதழ் பத்திரப்பதிவு துறையின் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.
    • இது தொடர்பான விசாரணையில் இவர்கள் மீது விதிமீறல் இல்லை என அறிவிக்கப்பட்டது.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை

    இது தொடர்பான விசாரணையில் இருவரும் விதிகளை மீறவில்லை என அரசு அறிவித்தது. தற்போது நயன்தாரா குழுந்தைகளை பார்ப்பதை முழுநேர வேலையாக செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார், நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினரை சந்தித்துள்ளார்.


    விக்னேஷ் சிவன் - ராதிகா- நயன்தாரா

    இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராதிகா சரத்குமார், அழகான பெண் நயன்தாரா மற்றும் ஜாலியான விக்னேஷ் சிவனை சந்தித்து தேநீர் அருந்தியதாகவும் அவர்களது குழந்தைகளை பார்த்ததாகவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு சமீபத்தில் வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. தற்போது நயன்தாரா குழுந்தைகளை பார்ப்பதை முழுநேர வேலையாக செய்து வருகிறார்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இவர் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இது உன்னுடனான எனது 9-வது பிறந்தநாள் நயன். உன்னை எப்போதும் சக்திவாய்ந்த பெண்ணாகவே பார்த்துள்னே். இதுவரையில் உன்னை வெவ்வேறு வடிவமாக பார்த்துள்ளேன்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    வாழ்க்கை மற்றும் அனைத்திலும் நீ காட்டும் நேர்மையால் எப்போதும் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஆனால் இன்று, தாயாக உன்னை பார்க்கும்போது.. இதுவே உனது மகிழ்ச்சியான மற்றும் முழுமையான உருவாக்கம். நீ இப்போது முழுமையாகிவிட்டாய். நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 





    • அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.


    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


    விக்னேஷ் சிவன் -அஜித்- அனிருத்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே -62 படத்தில் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    அஜித்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    விக்னேஷ் சிவ்ன் பதிவு

    இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், "எனது அடுத்த பெரிய வாய்ப்பான 'ஏகே 62' படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் பெரிய பொறுப்பினையளித்த அஜித், லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. சுவாரசியமான புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளேன். வாழ்க்கையில் சிறிய விஷயங்கள்தான் நம்மை மகிழ்ச்சியாக்குகிறது. அதில் கவனம் செலுத்தி மகிழ்ந்திருங்கள். பெரிய விஷயங்கள் தானாக வந்து விழுந்துவிடும்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.



    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு அண்மையில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

    தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் நடித்த 'கனெக்ட்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.


    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் தனது இரட்டை குழந்தைகளுடன் இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்களைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விக்னேஷ் சிவன் - அஜித்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    சந்தானம் - அரவிந்த் சாமி

    இந்நிலையில், ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • எச் வினோத் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.


    விக்னேஷ் சிவன் பதிவு

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் 'துணிவு' திரைப்படத்தை பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "திரையில் கிங்கை பார்ப்பது ரசிப்பது அலாதியானது. அனைத்து விதத்திலும் 'துணிவு' திரைப்படம் பிளாக் பஸ்டர். எச்.வினோத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே62 படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இவர் சபரிமலைக்கு யாத்திரை செய்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் எச். வினோத் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


    • அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    ஏகே 62 அப்டேட்

    இந்நிலையில், ஏகே62 படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    ×