என் மலர்
நீங்கள் தேடியது "Viswanathan Anand"
பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. #ViswanathanAnand #RussianFederation
சென்னை:
பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் சிறப்புமிக்க ‘நட்புறவு விருது’ வழங்கி கவுரவித்தார்.
விழாவில், ரஷிய நாட்டின் பெண் ஓவியர் கட்யா பெல்யாவ்ஸ்கயா, செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு ஒரு ஓவிய கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
‘நட்புறவு விருது’ என்பது இரு நாடுகள் இடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல், புரிதல் ஆகியவற்றுக்காக பாடுபட்ட பிரபலங்களுக்கு ரஷியா நாடு வழங்கும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. #ViswanathanAnand #RussianFederation
பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் சிறப்புமிக்க ‘நட்புறவு விருது’ வழங்கி கவுரவித்தார்.
விழாவில், ரஷிய நாட்டின் பெண் ஓவியர் கட்யா பெல்யாவ்ஸ்கயா, செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு ஒரு ஓவிய கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
‘நட்புறவு விருது’ என்பது இரு நாடுகள் இடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல், புரிதல் ஆகியவற்றுக்காக பாடுபட்ட பிரபலங்களுக்கு ரஷியா நாடு வழங்கும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. #ViswanathanAnand #RussianFederation
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவுக்கு எதிரான 8-வது சுற்று போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். #ViswanathanAnand #NorwayChessChampionship
ஆஸ்லோ:
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது எட்டாவது போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். இதையடுத்து முதலிடத்தில் இருந்த ஆனந்த் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். வீஸ்லி சோ - அமெரிக்கா, பேபியானோ கார்வானா - அமெரிக்கா, கார்ல்சன் - நார்வே, ஹிகாரு நாகமுரா - அமெரிக்கா ஆகியோர் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். #ViswanathanAnand #NorwayChessChampionship
ஆஸ்லோ:
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ஏழாவது போட்டியில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார். இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்த், 1 புள்ளி பெற்றார்.
இதன் மூலம் இதுவரை 7 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்), நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்), அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship