என் மலர்
நீங்கள் தேடியது "Vladmir Putin"
- அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
- அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்கோ:
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு ஆயுதமேந்திய நபர் அவரை படுகொலை செய்ய முயன்றபோது அவரது தைரியத்திற்காக அவரைப் பாராட்டினார், மேலும் மாஸ்கோ குடியரசுக் கட்சியுடன் உரையாடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஜூலை 14 அன்று பென்சில்வேனியாவில் நடந்த கொலை முயற்சியின் போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு உண்மையான மனிதனைப் போலவே செயல்பட்டார்.
என் கருத்துப்படி, அவர் மிகவும் சரியாக, தைரியமாக, ஓர் உண்மையான மனிதனைப் போல நடந்துகொண்டார். நீங்கள் தேர்தலில் வென்றதற்கு வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன்.
எதிர்கால டிரம்ப் நிர்வாகம் விரும்பினால் தொடர்பைத் தொடர தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.
- ரஷிய - உக்ரைன் போர் தொடர்பாக புதினை அலெக்ஸி ஜிமின் கடுமையாக விமர்சித்து வந்தார்.
- குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' என்ற அவரது ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.
உக்ரைன் - ரஷியா போர் தொடர்பாக புதினை விமர்சித்த 'செஃப்' அலெக்ஸி ஜிமின் சேர்பியாவில் உள்ள ஓட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் கிரீமிய தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அலெக்ஸி ஜிமின் விமர்சித்து ரஷியாவை விட்டு வெளியேறினார்.
பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட அலெக்ஸி ஜிமின் ரஷியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்ந்தார். அங்கிருந்தே ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று மக்களிடையே புகழ்பெற்றார்.
பின்னர் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் - ரஷிய போர் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை அலெக்ஸி ஜிமின் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வந்தார். இதனையடுத்து 'குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' என்ற அவரது ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்த செர்பியாவிற்கு அலெக்ஸி ஜிமின் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
- உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது.
மாஸ்கோ:
ரஷியா- உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டிருந்தது.
உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார் என கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர்
டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் புதின் இந்தியா வரும் தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
