search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Votes"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி பதவிகளுக்கு 4 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிப்படுகின்றன. #kashmirMunicipalelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப்பதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்தார். இதனால், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் இந்த நகராட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

    மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் போட்டியிட யாரும் முன்வராததாலும், ஒருவர் மட்டுமே போட்டியிட்டதாலும் 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக  மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

    இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நாளை வெளியாகும் முடிவுகள் சுமார் 3 ஆயிரம் வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கவுள்ள நிலையில்  அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #kashmirMunicipalelection
    கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. #KarnatakaBypoll #Jayanagar
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் ஜெயநகர் தொகுதியில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் 1,11,689 வாக்காளர்கள் (55 சதவீதம்) வாக்களித்தனர்.



    இந்த தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கு இடையே நேரடிப் போட்டி இருந்தது.

    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு, எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளர் பிரகலாத்தை விட 427 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். #KarnatakaPoll #Jayanagar #JayanagarCounting
    ×