என் மலர்
நீங்கள் தேடியது "webseries"
- இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
- பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி
ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் கண்ணோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத். இவர் இயக்கும் எல்லாப்படங்களிலும் ஒரு பிரமாண்ட நடனப் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.
இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்து இருப்பார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் செய்து இருந்தார்.
அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார்.
- இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார்.
பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது. டிரைலர் காட்சிகல் சமூக வலைத்தலங்களில் பரவி வருகிரது. சீரிசின் டிரைலரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.
- 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர், ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார் என்ற இணைய தொடர் மூலம் ஓ.டி.டி. தளத்திற்கு அறிமுகமானார். இவர் இயக்கத்தில் உருவான "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" சீரிசில் சோனாக்ஷி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதித்தி ராவ் ஹைதாரி மற்றும் பலர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றிய கதையம்சம் கொண்ட தொடராக ஹீரமண்டி உருவாகி இருக்கிறது. விலை உயர்ந்த நகைகளில் துவங்கி, ஆடம்பர செட் என இந்த வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், ஹீரமண்டி வெப் சீரிசில் பிரபலங்கள் வாங்கிய சம்பலம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஹீரமண்டி வெப் சீரிசில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஹீரமண்டி வெப் சீரிஸ் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ரூ. 60 இல் இருந்து ரூ. 70 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து சோனாக்ஷி சின்காவுக்கு ரூ. 2 கோடியும், மனிஷா கொய்ராலா மற்றும் ரிச்சா சத்தா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடியும், அதித்தி ராவுக்கு ரூ. 1.5 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதே போன்று சஞ்சிதா ஷேக் ரூ. 40 லட்சமும், ஷார்மின் சீகல் ரூ. 30 லட்சமும், வாலி முகமது ரூ. 75 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி.
- இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது.
ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் விஷ்வல்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத்.
இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகியது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்த நெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. சீரிஸ் வெளியாகி மக்களிடையே நல்லம் வரவேற்பை பெற்றது.
சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது. 43 நாடுகளில் ஹீரமண்டி தொடர் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹீரமண்டி சீசன் -2 வை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளார். லாஹுரில் இருந்து வெளியேறிய பெண் திரைத்துறை உலகத்திற்கு வருகிறாள். லாஹூர் பிரிவினைக்கு பிறகு பஸாரில் உள்ள பெரும்பாலான பெண்கள் மும்பை மற்றும் கொல்கத்தா திரைத்துறைக்குதான் வந்தடந்தனர், இங்கு நவாபுகளுக்கான ஆடிய பெண்கள் திரைத்துறையில் தயாரிப்பாளர்களுக்காக ஆடினார்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் அதை மையமாக வைத்து ஹீரமண்டி சீசன் 2 வை இயக்கவுள்ளதாக சஞ்சய் கூறியுள்ளார். இதனால் ஹீரமண்டி தொடரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- : இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ் வெப் தொடர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
- இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார்.
ரீவைண்ட் 2024 : இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ் வெப் தொடர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
இன்ஸ்பெக்டர் ரிஷி
இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார். இத்தொடரில் நவீன் சந்திரா, ஸ்ரீகிருஷ்ணா தயால். கன்னா ரவி, மாலினி ஜீவரத்னம், சுனைனா, குமரன் , ஹரினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய மலைகிராமத்தில் தொடர்ந்து நடக்கும் மர்ம இறப்புகளை மையமாக வைத்து இயக்கிய தொடராகும். இத்தொடரில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளன. இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தலைமை செயலகம்
தலைமை செயலகம் வெப் தொடரை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இத்தொடரில் கிஷோர், ஸ்ரீயாரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி கஸ்தூரி, நிரூப், தர்ஷா குப்தா, சாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிஷோர் தலைமையில் இருக்கும் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்ப்டுகிறது. அதிகாரம், அரசியல் , ஊழல் என இவற்றை பத்தி பேசும் கதையாக தலைமை செயலகம் வெப் தொடர். இத்தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பாராசூட்
கிஷோர்,கனி திரு, கிருஷ்னா , சக்தி ரித்விக் , இயல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாராசூட் வெப் தொடர். ஸ்ரீதர் கே இத்தொடரை இயக்கியுள்ளார். ஒரு உடன்பிறந்த இருவரும் தங்கள் கண்டிப்பான தந்தையின் மொப்பட்டை சவாரிக்கு எடுத்துச் சென்று அது திருடப்பட்ட பிறகு, குழந்தைகள் அதைத் தேடிச் செல்கிறார்கள், அவர்கள் காணாமல் போனது குறித்து பெற்றோருக்கு எந்த துப்பும் இல்லை. நுட்பமான நடிப்பு, மிருதுவான திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப செயலாக்கத்துடன், பாராசூட் இந்த ஆண்டு பார்க்க வேண்டிய இணையத் தொடர்களில் முக்கியமான ஒன்றாகும். இத்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
சட்னி சாம்பார்
ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சட்னி சாம்பார் வெப் தொடர். இவருடன் நிழல்கள் ரவி, வாணி போஜன், சந்திரமௌலி, இளங்கோ குமரவேல், நந்தினி மற்றும் நித்தின் சத்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இது யோகி பாபு நடத்தி வரும் கையேந்திபவன் மற்றும் மற்றொரு மகனின் பேமஸ் ஓட்டலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
தலைவெட்டியான் பாளையம்
தலைவெட்டியான் பாளையம் ஒரு நகைச்சுவை வெப் தொடராகும். இத்தொடர் இந்தி தொடரான பஞ்சாயத்தின் தமிழ் வெர்ஷனாகும். இத்தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, நியத்தி, தேவதர்ஷினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிறந்து வளர்ந்த இளைஞனான அபிஷேக் ஒரு தனி கிராமத்தில் பஞ்சாயத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அந்த கிராம வாழ்க்கையில் அவர் பழகிக்கொள்ளும் விதத்தை நகைச்சுவையாக காட்சி படுத்தியுள்ளனர். இத்தொடரை பிரபல இயக்குனரான நாகா இயக்கியுள்ளார். இத்தொடர் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜர்னி
இத்தொடரை சேரன் இயக்கியுள்ளார். இத்தொடரில் ஜாஸ்மின், சரத்குமார், அஞ்சு குரியன், கலையரசன், திவ்யபாரதி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வெவ்வேறு பின்னணிகளை கொண்ட 5 கதாப்பாத்திரம் ஒரு வேலைக்காக போட்டியிடுகின்றனர் இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் மொத்தம் 9 எபிசோடுகள் கொண்டதாகும். இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹார்ட் பீட்
ஆர் கே மல்டிஸ்பெஷாலிடி மருத்துவமனையில் பணிப்புரியும் மருத்துவர்கள் அன்கு வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களின் வாழ்க்கை பிரச்சனையை பற்றி மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஹார்ட் பீட் வெப் தொடர். அனுமோல் , தீபா பாலு , சாருகேஷ் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இத்தொடரில் மொத்தம் 72 எபிச்சோடுகள் உள்ளன. இத்தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் ஓடிடி தளம் ஒன்றில் 'ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் வெளியானது.
- தற்போது இந்த வெப்தொடரின் இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் வெப்தொடரான 'ஸ்குவிட் கேம்' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வெப்தொடரானது வெளியான முதல் நான்கு வாரங்களிலேயே 1.65 பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. ரசிகர்கள் இந்த வெப்தொடரின் இரண்டாவது சீசன் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிவந்தனர். இதையடுத்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் வெளியாக உள்ளதை நெட்ஃபிளிக்ஸ் சமூக வலைதளத்தில் சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்க்விட் கேம்
இது தொடர்பாக ஹ்வாங் டாங் ஹியூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்குவிட் கேம் தொடரின் முதல் சீசனை வெளியிடுவதற்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களால் கண்டு களிக்கப்பட்ட தொடராக 'ஸ்குவிட் கேம்' மாறியதற்கு வெறும் 12 நாட்களே தேவைப்பட்டன. தொடரை பார்த்து ரசித்தற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.