search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal Train Accident"

    • எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டு, தூக்கி வீசப்பட்டன.
    • சரக்கு ரெயிலின் என்ஜின் பகுதி, பயணிகள் ரெயிலின் மற்றொரு பெட்டியின் அடிப்பகுதியில் புகுந்து நின்றது.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து அசாம் வழியாக திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவுக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் டார்ஜிலிங் செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகம்பேர் பயணிப்பார்கள்.

    நேற்று முன்தினம் இரவு இந்த ரெயில் அகர்தலாவில் இருந்து, கொல்கத்தா அருகே உள்ள சீல்டாவுக்கு புறப்பட்டது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    நியூ ஜல்பைகுரி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை வந்தபோது, சிக்னலுக்காக கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது அதே தடத்தில் வந்த சரக்கு ரெயில் ஒன்று, நின்று கொண்டு இருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

    இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டு, தூக்கி வீசப்பட்டன. இதில் அந்த 3 பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்தன.


    அதே நேரம் சரக்கு ரெயிலின் என்ஜின் பகுதி, பயணிகள் ரெயிலின் மற்றொரு பெட்டியின் அடிப்பகுதியில் புகுந்து நின்றது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அந்த பெட்டி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

    இந்த கோரவிபத்தில், சரக்கு ரெயிலை ஓட்டிவந்த டிரைவர் (லோகோ பைலட்), உதவி டிரைவர் மற்றும் ரெயில்களில் பயணித்தவர்கள் என 9 பேர் பலியானார்கள். 41 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நேரம் உள்ளூர் போலீசார் கூறுகையில், 'விபத்தில் 15 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்றும், 60 பேர் படுகாயம் அடைந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், ரெயில்வே உயர் அதிகாரிகள், மீட்பு படையினர், போலீசார் அங்கு சென்று உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சேதமடைந்த ரெயில் பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்கும் பணியில் போலீசாருடன், உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர்.

    இதனிடையே, ரெயில் விபத்து நடந்த பகுதியில் நடைபெற்ற மீட்பு பணிகள் காரணமாக இன்று காலை முதல் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. விபத்து நடந்த பகுதியை ரெயில் கடக்கும்போது மெதுவாக செல்கிறது.

    • 2011-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் அருகே கல்கா மெயில் ரெயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
    • 2016 -ஆம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.

    * டிசம்பர் 1964 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியில் பாம்பன்-தனுஸ்கோடி பயணிகள் ரெயில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 126-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.

    * கடந்த 1981ஆம் ஆண்டு நாட்டின் மிக மோசமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய ரெயில் விபத்து பீகாரில் நடந்தது. பீகார் மாநிலம் பாலகோட்டில் வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கிய பயணிகள் ரெயில் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. 9 பெட்டிகளுடன் பயணிகள் நெரிசலில் சென்ற ரெயிலின் 7 பெட்டிகள் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 800 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது.

    * 1981 ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் 3 பயணிகள் ரெயில்கள் ஒரே பாதையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

    * 1988 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கேரளாவில் உள்ள அஷ்டமுடி ஏரியின் மீதுள்ள பெருமான் பாலத்தில் ரெயில் தடம் புரண்டு தண்ணீரில் விழுந்ததில் 105 பேர் உயிரிழந்தனர்.

    * 1995 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது டெல்லி செல்லும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 358 பயணிகள் உயிரிழந்தனர்.

    * 1998 ஆம் ஆண்டு கொல்கத்தா செல்லும் ஜம்மு தாவாய்-சீல்டா எக்ஸ்பிரஸ், பஞ்சாபின் வடக்கு ரெயில்வேயின் கன்னா-லூதியானா பிரிவில் அமிர்தசரஸ் செல்லும் எல்லைப்புற கோல்டன் டெம்பிள் மெயிலின் தடம் புரண்ட 6 பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.

    * 1999 ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 310 மைல் தொலைவில் உள்ள கைசல் அருகே இரண்டு அதிவேக ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது இரண்டு ரெயில்களில் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விபத்தில் இரண்டு ரெயில்களில் பயணித்த சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் அதிவேக ரெயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்ச் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 140 பயணிகள் உயிரிழந்தனர்.

    * 2005- ஆம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள ஒரு சிறிய ரெயில் பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் சேதமடைந்த பகுதி அருகே சென்றபோது டெல்டா பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் தடம் புரண்டு 114 பேர் இறந்தனர்.

    * 2010-ஆம் ஆண்டு மேற்கு மிட்னாபூரில் உள்ள கெமாஷூலி மற்றும் சர்திஹா அருகே மும்பை நோக்கிச் சென்ற ஹவுரா குர்லா லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரெயில் மீது மோதி சுமார் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * 2011-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் அருகே கல்கா மெயில் ரெயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.

    * 2016 -ஆம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.

    * 2017-ஆம் ஆண்டு தெற்கு ஆந்திராவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

    * 2018-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடந்த ரெயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    * 2023-ஆம் ஆண்டு ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.

    * மேற்கு வங்கத்தில் இன்று நிகழ்ந்த ரெயில் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் தேசிய மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ரெயில் மோதிக்கொண்ட விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.



    அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சரக்கு ரெயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த வழித்தடத்தில் தானியங்கி சிக்னல்கள் உள்ளன. இரண்டு வழித்தடத்திலும் எப்போதும் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான வழித்தடமாக இது உள்ளது. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் தான் இணைக்கிறது. தற்போது ரெயில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவ்வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,

    மேற்கு வங்க மாநிலம் நியூ ஜப்பைகுரி பகுதியில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரெயிலும் சரக்கு ரெயிலும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ரெயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

    • சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 15பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • வடகிழக்கு மண்டலத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து.
    • தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 25 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட டார்ஜிலிங் காவல்துறையின் கூடுதல் எஸ்.பி. அபிஷேக் ராய் கூறுகையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரெயில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் 5 பயணிகள் இறந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமாக உள்ளது என்றார்.

    இதனிடையே ரெயில் விபத்து குறித்து அறிந்த மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தள பக்கத்தில்

    கூறியிருப்பதாவது:- "வடகிழக்கு மண்டலத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ரெயில்வே, தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்" என்றார்.



    ரெயில் விபத்தில் சிக்கியவர்கள் தொடர்பாக அறிய 033 2350 8794, 033 2383 3326 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ×