என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yemen"

    ஏமன் நாட்டில் அமெரிக்க படையினர் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதி கொல்லப்பட்டார். #YemenDroneStrike #AlQaidaLeader
    சனா:

    ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் கைப்பற்றி உள்ளது.  இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக இருந்து வருபவர் படாவி.

    இவர் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபரில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யூ.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடந்த ஆயுத தாக்குதலில் தொடர்புடையவர்.  இந்த தாக்குதலில் 17 அமெரிக்க கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில், பயங்கரவாத இயக்க ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனியாக வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டு இருந்துள்ளார்.  அவர் மீது திடீரென அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் படாவி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனினும் இந்த தகவலை ஏமனை சேர்ந்த அல் கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. #YemenDroneStrike #AlQaidaLeader

    ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. #Yemen #Hodeida #Clashes
    ஹொதய்தா:

    ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா கடந்த 4 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க அதிபர் ஆதரவு படையினர் கடந்த ஒரு வார காலமாக அங்கு கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

    இரு தரப்புக்குமான இந்த போரில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகி வருகின்றனர். இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 43 கிளர்ச்சியாளர்களும், அதிபர் ஆதரவு படையினர் 9 பேரும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

    அங்கு தொடர்ந்து சண்டை நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர் மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில் பலியானதாக தெரிகிறது. 
    ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் 61 பேர் உயிரிழந்தனர். #Yemen #Hodeida #Clashes
    சனா:

    ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.



    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்நிலையில், ஹொடெய்டாவில் ஹவுத்தி போராளிகளுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஹொடைடா மாகாணத்தில் நேற்றிலிருந்து கடந்த 24 மணிநேரமாக நிகழ்ந்த மோதலில் ஹவுத்தி போராளிகளில் 43 பேரும் முன்னாள் அதிபர் அப்துல்லா சாலேவின் ஆதரவாளர்கள் 18 பேரும் உயிரிழந்ததாக ஏமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  #Yemen #Hodeida #Clashes

    ஏமனில் நிகழும் கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Yemen
    ஏடன்:

    ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந்தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. 4-வது ஆண்டாக அந்தப் போர் நீடிக்கிறது.

    அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களத்தில் குதித்துள்ளன.

    அங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அங்கு 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.



    அந்த நகரை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்டு வருகின்றன.

    ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம் வான்தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று நடந்த கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக அதிபர் படை வட்டாரங்கள் கூறுகையில், “கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும், கண்ணி வெடிகளாலும்தான் நாங்கள் ஹொதய்தா நகரை நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.
    ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். #HouthiMilitantsKilled
    சனா:

    ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
     
    இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா மீது தீராப்பகையை உண்டாக்கி உள்ளது. இதனால் சமீப காலமாக சவுதி அரேபிய நகரங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 45 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல்கள் ஹூடியத் மற்றும் துரிஹெமி மாவட்டங்களில் நடந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #HouthiMilitantsKilled
    அரபிக்கடலில் உருவான லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Luban #ArabianSea
    புதுடெல்லி:

    கேரளா அருகே அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான ‘லூபன்’ புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஓமன் நாட்டு கடற்கரை நோக்கி நகர்ந்தது.

    லூபன் புயல் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதால் ஓமன் கடற்கரையை அடைய தாமதம் ஏற்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    இன்று காலை மேற்கு மத்திய அரபிக்கடலில் ஓமன் நாட்டின் சலாபா நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஓமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து கிழக்கு வடகிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் அல் கைதாக் நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    கோப்புப்படம்

    அதிதீவிர லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டில் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.  பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.  #Luban #ArabianSea
    ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் பத்துக்கும் அதிகமான சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Cargoshipsdetained
    சனா:

    ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.


    ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கான இந்த முயற்சி கடந்த மாதம் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், கோதுமை மாவு, சர்க்கரை என சுமார் 5700 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த சரக்கு கப்பல்கள் மற்றும் சுமார் 20 ஆயிரம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஏற்றிவந்த டேங்கர் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்து வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Cargoshipsdetained #oiltankersdetained #Houthimilitia #Hodeidahport
    ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது. #YemenAirStrikes
    சனா:

    ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

    சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

    இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த பேருந்தில் பயணம் செய்த 29 குழந்தைகளும் அந்த தாக்குதலில் பலியாகினர். 

    இந்நிலையில், ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பேருந்தில் சென்ற 29 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த  ஆணையிட்டுள்ளது.

    இதேபோல், சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும் விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #YemenAirStrikes
    ஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #YemenAirStrikes
    சனா:

    ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

    சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #YemenAirStrikes
    ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
    சனா :

    ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் அதிபர் மன்சூர் ஹாதி வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.

    ஏமனில் மீண்டும் மன்சூர் ஹாதி அரசை அமைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சன்னி இஸ்லாமியர்கள் கூட்டணி மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.

    ஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மருத்துவமனை, மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்கள் சந்தையில் சவுதி கூட்டணி படைகள் கடந்த2-ம் தேதி தாக்குதலில் ஈடுபட்டன. இதில், பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. 

    இந்நிலையில், ’இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது, தாக்குதல் நிகழ்ந்தற்கான சூழ்நிலை குறித்து இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.  பொதுமக்களின் வாழ்க்கையும் அவர்களின் சொத்துக்களும் மரியாதை குறைவான நிலையில் நடத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது’ என ஏமனுக்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் தலைவர் ஜோன்னேஸ் ப்ரூவர்இன்று தெரிவித்துள்ளார். 
    ஏமன் கடல் பகுதியில் அகதிகளை அழைத்து வந்த படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Yemen #MigrantsDrown
    ஜெனிவா:

    ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அதற்கு அம்மக்கள் ஏமன் நாட்டினை நுழைவாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், எத்தியோப்பியாவை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக ஒரு படகில் ஏமனுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த படகில் 100க்கு மேற்பட்ட அகதிகள் இருந்தனர். இதில் 83 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர்.

    இந்த படகு ஏமன் அருகே வந்தபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியதில் 46 பேர் மூழ்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் மாயமான 16 அகதிகளை தேடி வருகின்றனர். #Yemen #MigrantsDrown 
    ஏமன் நாட்டில் உள்ள சொகோட்ரா தீவில் ஏற்பட்ட புயலில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்திய கப்பற்படை இன்று மீட்டுள்ளது. #Cyclone #Omen #Yemen
    சனா :

    அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் தேதி பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மெகுனு புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்களை மீட்க இந்திய கப்பற்படைக்கு சொந்தமான சுனைனா என்ற கப்பல் ஏமன் நாட்டுக்கு விரைந்தது. அங்கு புயல் பாதிப்பினால் சிக்கித்தவித்த  38 இந்தியர்களை இன்று இந்திய கப்பற்படையினர் பத்திரமாக மீட்டனர். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்த அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை, உணவு மற்றும் உறவினர்களுடன் தொடர்புகொண்டு பேச தொலைபேசி ஆகியவை வழங்கப்பட்டது. #Cyclone #Omen #Yemen
    ×