என் மலர்
நீங்கள் தேடியது "அதிபர் புதின்"
- இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ரஷிய அதிபர் புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் - போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது இளம் நிருபர் கிரில் பஜானோவ் என்பவர் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை காண்பித்தப்படி தனது காதலியிடம் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது 'என் காதலி இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும், என்னை மணந்துகொள் என்றார். இதை அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உடனே ரஷிய அதிபர் புதின் மற்றும் அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது புதின் கூறும்போது, நீங்கள் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டீர்கள் என்றார்.
அதற்கு பஜானோவ் புதினிடம், எங்கள் திருமணத்திற்கு நீங்கள் வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.
- டெல்லி விமான நிலையம் வந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
- பிரதமர் மோடி அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார்.
புதுடெல்லி:
ரஷிய அதிபர் புதின் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார்.
டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன்பின், இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். அதைத் தொடர்ந்து, புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின், அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் அதிபர் புதின் எழுதியதாவது:
மகாத்மா காந்தி அகிம்சை மற்றும் உண்மை மூலம் நமது பூமியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு விலைமதிப்பில்லாத பங்களிப்பை செய்துள்ளார். அவரது செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது.
மகாத்மா காந்தி ஒரு புதிய, நியாயமான, பன்முக உலக ஒழுங்கை நோக்கிய பாதையைக் காட்டினார். அந்த உலகம் இப்போது உருவாகி வருகிறது. சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அவரது போதனைகளை இந்தியா இன்று உலக மக்களுடன் சேர்ந்து - சர்வதேச அரங்கில் அவரது கொள்கைகளையும், மதிப்புகளையும் பாதுகாக்கிறது. ரஷ்யாவும் அவ்வாறே செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் புதின் ரஷிய மொழியில் இந்தக் குறிப்பை எழுதியது குறிப்பிடத்தக்கது.
- ரஷிய அதிபர் புதின் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
- பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார்.
தலைநகர் டெல்லி வந்தடைந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். பின்னர் புதின் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.
ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை அதிபர் புதினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார். மாநாட்டுக்கு இடையே மோடி-புதின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கும் அவர்கள், கூட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- உக்ரைன் - ரஷியா இடையிலான போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.
- இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். அதிபர் புதின் டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் உடனான போர் தொடங்கிய பிறகு, புதினின் முதல் இந்திய பயணம் இதுவென்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடைசியாக 2021 டிசம்பர் மாதம், அவர் இந்தியா வந்திருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
- அப்போது, இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது புதினின் 73-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
அப்போது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன், புதினின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி புதினை அழைத்தார்.
கடந்த வாரம் அதிபர் புதின் தனது இந்திய வருகையை உறுதிசெய்தார். சமீபத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் - ரஷியா இடையிலான போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.
- இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
புதுடெல்லி:
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். அதிபர் புதின் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தும் அவர், சுகோய்-57 ரக போர் விமான விற்பனை, எஸ்- 400 ஏவுகணைகள் டெலிவிரி ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இதனை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது பிறந்தநாளுக்கு தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்து கூறிய எனது நண்பர் அதிபர் புதினுக்கு நன்றி. நமது சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்பையும் செய்ய தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பீஜிங்:
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தியான்ஜெனில் நாளை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி. நடந்து வரும் மோதல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்குகிறது எனதெரிவித்துள்ளார்.
- சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் நடக்கிறது.
- பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாஸ்கோ:
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷா கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஒன்றாம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப் பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது' என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, இதில் முக்கியமானது என்னவென்றால், வரும் டிசம்பரில் நமது அதிபரின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவதும் உறுதியாகி உள்ளது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ரஷியா அதிபர் புதின் ஏற்றுக்கொண்டார்.
- வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.
பியாங்காங்:
வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் ராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ரஷியா அதிபர் புதின் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ரஷியா அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆனால் வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், வடகொரியா அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவின் அழைப்பை ஏற்று ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டது.
அச்சமயத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார்.
- மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதிபர் புதின்-ஜெய்சங்கர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் உடனான சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
கிரெம்ளினில் அதிபர் புதினைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.
முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் நிதி மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான எனது கலந்துரையாடல்களை அவருக்குத் தெரிவித்தேன். வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
உலகளாவிய நிலைமை மற்றும் உக்ரைன் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.






