என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"

    • அரசிற்கு எதிராக இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

    பாகிஸ்தானின் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவின் தலைமை இயக்குநர், லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர் ஒருவரை பார்த்து கண் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அகமது ஷெரீஃப், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர் என்றும், அரசிற்கு எதிராக இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

    இது குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் அப்சா கோமல், "கடந்த காலத்தில் இருந்து இப்போது என்ன வேறுபாடு உள்ளது. அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்டார்.

    இதற்கு பதிலளித்த அகமது, கேலியான தொனியில், "அவர் (இம்ரான் கான்) ஒரு மன நோயாளி" என்று கூறிவிட்டு, சிரித்துக்கொண்டே கோமலைப் பார்த்து கண் சிமிட்டினார்.

    அகமது ஷெரீஃப், ஓசாமா பின்லேடனின் உதவியாளராக இருந்தவரும், அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியுமான சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
    • அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.

    அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.

    ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

    • இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதங்களால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
    • விமானப் ஊழியர்களும் சில பயணிகளும் சேர்ந்து பறவையைப் பிடிக்க முயன்றனர்.

    விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதங்களால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் பெங்களூருவில் இருந்து வதோதரா புறப்படவிருந்த இண்டிகோ விமானம் ஒன்றிற்குள் புறா ஒன்று பறந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    பெங்களூருவில் இருந்து வதோதராவுக்குச் செல்லவிருந்த இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னதாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக இன்ஸ்டாகிராம் பதிவுகள் தெரிவிக்கின்றன.

    வைரலான வீடியோவில், அந்தப் புறா விமானத்தின் உட்புறத்தில் உள்ள பயணிகள் இருக்கைகளுக்கு மேலே, வெளியேறும் வழியைத் தேடிப் பறந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

    விமானப் ஊழியர்களும் சில பயணிகளும் சேர்ந்து பறவையைப் பிடிக்க முயன்றனர். இதனால் விமானத்தில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

    இந்தப் புறா, விமான நிலையத்தின் கேட் திறந்திருந்த போது அல்லது பயணிகள் ஏறும் போது விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்தச் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு பயணி "விமானத்தில் ஒரு திடீர் விருந்தாளி " என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். 

    • அப்போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது.
    • சில நொடிகளில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்ற நபர் கடந்த மாதம் 1 ஆம் தேதி பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது

    அவர் உடனடியாக அதை பக்கவாட்டில் அகற்றி எழுந்து நின்றார். சில நொடிகளில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    ஜிம் ஊழியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாண்டினீக்ரோ உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    • 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது கேள்வி எழுப்பினார்.
    • நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை.

    டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது, ஒரு டாலருக்கு ரூ.90க்கும் கீழே சரிந்துள்ளது.

    நேற்று காலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் 28 பைசாக்கள் சரிந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு ரூ.90.43 ஆகக் குறைந்தது.

    இந்நிலையில் கடந்த 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை மோடி விமர்சித்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    "ரூபாய் மதிப்பு ஏன் சரிந்து வருகிறது? பிரதமரிடம் நரேந்திர மோடியின் கேள்வி" என்ற தலைப்பில் மோடியின் வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

    அந்த வீடியோவில், "நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு பதிலளிக்க வேண்டும்" என்று மோடி பேசியுள்ளார்.

    • வலியால் அவர் துடித்தபோதும் மான் சிங் தொடர்ந்து அவரை தாங்கியபடி இருந்தார்.
    • கண்ணீருடன் தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நொண்டியபடி சென்றார்.

    பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒரு மாற்றுத்திறனாளியிடம் ரெயில்வே போலீஸ்காரர் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தை ஒரு பயணி தனது தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

    பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை நோக்கி கோபத்துடன் வந்த சீருடையில் இல்லாத ஆர்பிஎஃப் தலைமை கான்ஸ்டபிள் மான் சிங் அவரை உதைத்து அங்கிருந்து விரட்டினார். வலியால் அவர் துடித்தபோதும் மான் சிங் தொடர்ந்து அவரை தாக்கியபடி இருந்தார்.

    மான் சிங்கால் தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, கண்ணீருடன் தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நொண்டியபடி சென்றார்.

    இதற்கிடையில் மான் சங், மாற்றுத்திறனாளி நபர் குடிபோதையில் இருந்ததாகவும், நடைமேடையில் மக்களை தொந்தரவு செய்ததாகவும் , அதனாலேயே இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

    ஆனால் உயர் அதிகாரிகள் இந்த விளக்கத்தில் திருப்தி அடையதாக நிலையில் அவரை இடைநீக்கம் செய்து சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டனர். 

    • சரக்கு ரெயிலின் கீழ் கைகோர்த்தபடி அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்தனர்.
    • சரக்கு ரயில், திடீரென பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது.

    காதலுக்கு கண்ணில்லை என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் கீழ் கைகோர்த்தபடி அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்த ஜோடி மயிரிழையில் உயிர்தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

    அவர்கள் காதலில் மூழ்கியிருந்தபோது அதுவரை நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில், திடீரென பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஜோடி சுயநினைவுக்கு திரும்பி, தண்டவாளத்தில் இருந்து தவழ்ந்துசென்று விலகி தங்கள் உயிரை காத்துக் கொண்டனர்.

    அவர்கள் விலகிய சில நிமிடங்களில், ரெயில் முன்னோக்கி நகர்ந்து சென்றது. ஒரு கணம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் உயிர் பறிபோயிருக்கும்.

    இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். இது எங்கு எப்போது நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாவில்லை. எனினும் வீடியோ படு வைரலாகி வருகிறது.  

    • சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
    • மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

    குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற சர்தார் படேல் 150 ஆண்டு நிகழ்வில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா காங்கிரசை காரசாரமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

    அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மற்ற அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். ஆனால் நட்டா இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இந்த வீடியோவை எக்ஸில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ், ஜே.பி. நட்டா பேசிக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மேடை அருகே மயங்கி விழுந்துள்ளார்.

    இருப்பினும், நட்டா தனது பேச்சை நிறுத்தவில்லை .மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

    கண் முன்னால் ஒருவர் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாத பாஜக தலைவர்கள், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி எப்படி அக்கறை செலுத்துவார்கள்?

    அதிகாரம் மட்டுமே முக்கியம், பொதுமக்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல என்பதே பாஜகவின் யதார்த்தம். பாஜக மனித நேயத்தை விற்றுவிட்டது என்று சாட்டியுள்ளது.

    இதற்கிடையே மயங்கி விழுந்தவர், நீண்ட நேரம் நின்றதால் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ உதவிக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக கூறப்படுகிறது. 

    • ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) நடைபெற்று முடிந்தது.

    விழாவின் நிறைவு நாளில் மேடையில் ரன்வீர் சிங் செய்த செயலின் வீடியோ இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது.

    அண்மையில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திலும், 2022 இல் வெளியான முதல் பாகத்திலும் ரிஷப் செட்டி, சாமியாடிகள் எழுப்பும் 'ஓ' என்ற ஒளியை ஆக்ரோஷமான முகபாவத்துடன் எழுப்பும் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும்.

    இதை மேடையில் முயன்ற ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் அதை செய்தார். அப்போது ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்தும் அதை பார்த்துக்கொண்டிருந்தார்.

    இதற்கு முன்னதாக "நான் காந்தாரா சாப்டர்1 ஐ திரையரங்குகளில் பார்த்தேன், ரிஷப் நன்றாக நடித்திருந்தார், குறிப்பாக பெண் ஆவி (சாமுண்டி தெய்வம்) உங்கள் உடலில் நுழையும் போது அந்த ஷாட் அற்புதமாக இருந்தது" என்றும் ரன்வீர் சிங் மேடையில் பேசியிருந்தார். 

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் கன்னடர்களின் தெய்வங்களை அவர் கிண்டலிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    ரன்வீர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் நடிப்பில் வெளியாக உள்ள 'துரந்தர்' படத்தின் வெளியீட்டைத் தடுப்போம் என்றும் எச்சரித்து வருகின்றனர். ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.
    • ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது.

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. உள்ளூரில் இருந்தும், வெளியூரிலிருந்து யாத்திரை மேற்கொண்டும் இங்கு வழிபட பலர் வருவர்.

    அந்த வகையில் இந்த மாதம் 12 ஆம் தேதி கோவிலுக்கு சென்ற யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.

    பிரார்த்தனைக்காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

    அவர் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்காமல் தள்ளி வைத்ததாக தெரியவந்துள்ளது.

    இதன் விளைவாக, மெழுகுவர்த்தி உருகி தீப்பிடித்தது. தீ மொத்தம் உள்ள மூன்று தளங்களுக்கும் பரவி கோவிலை முழுமையாக ஆட்கொண்டது. பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையில் கோவில் அதிக சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து முடிந்த பின் கோயில் புனரமைப்புப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • C-130 ரக விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
    • விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    அஜர்பைஜான்-ஜார்ஜியா எல்லைக்கு அருகே துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.

    துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில், C-130 ரக விமானம் அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளது. 

    ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் அந்த விமானத்தில் இருந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஜார்ஜியா அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

    விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

    • சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன.
    • வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.

    பீகாரின் சமஸ்திபூரில் சாலையில் பறக்கும் VVPAT சீட்டுகளின் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வாக்காளர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை சரிபார்க்க கூடிய VVPAT சீட்டுகள் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.

    இந்த சீட்டுகள் வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து வந்தவை என்று ஆர்ஜேடி குற்றம் சாட்டியது.

    இருப்பினும், இந்த சீட்டுகள் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனை வாக்குப்பதிவிலிருந்து வந்தவை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சீட்டுகள் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த சமஸ்திபூர் மாவட்ட நீதிபதி ரோஷன் குஷ்வாஹா, "நாங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, இந்த சீட்டுகள் மாதிரி வாக்குப்பதிவில் இருந்து வந்தவை என்பதைக் கண்டறிந்தோம்.

    அவை சரியாக அழிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பான வாக்குச் சாவடி ஊழியர்களை அந்த சீட்டுகளில் உள்ள EVM எண்களைப் பயன்படுத்தி அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக  கடமை தவறியதற்காக உதவி தேர்தல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவுத்துள்ளது.  

    ×