என் மலர்
- காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்து 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.
- முதலமைச்சர் மம்தா பானர்ஜி விசாரணை ஆணையம் அமைத்தார்.
அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.
இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர்கள் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை செலவு செய்து டிக்கெட்டுகளை வாங்கினர்.
அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்து 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.
அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே நிர்வாக குறைபாடு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி ஜாவேத் சமீம் உறுதிப்படுத்தியுள்ளார்.
- 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
- திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் பாராட்ட விரும்புகிறேன்.
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.
இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திருவனந்தபுரம் எம்.பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
"கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் என்னவொரு அற்புதமான முடிவுகள் நிறைந்த நாள். மக்கள் ஆணை தெளிவாக உள்ளது, மேலும் மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது.
பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய வெற்றியைப் பெற்றகாங்கிரசின் UDF -க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமும், மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையும் ஆகும்.
கடின உழைப்பு, ஒரு வலுவான செய்தி மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை அனைத்தும் 2020-ஐ விட மிகச் சிறந்த முடிவை அடைய உதவியுள்ளன.
திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனையும் நான் பாராட்ட விரும்புகிறேன். மேலும் நகர மாநகராட்சியில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தலைநகரின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறனாகும். 45 ஆண்டுகால இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தவறான ஆட்சிக்கு ஒரு மாற்றத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன், ஆனால் வாக்காளர்கள் இறுதியில் ஆட்சியமைப்பில் ஒரு தெளிவான மாற்றத்தை விரும்பிய மற்றொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளனர்.
அதுதான் ஜனநாயகத்தின் அழகு. ஒட்டுமொத்தமாக UDF-ஆக இருந்தாலும் சரி, அல்லது எனது தொகுதியில் பாஜக-வாக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.
கேரளாவின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களின் தேவைகளுக்காக வாதிடுவோம் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். முன்னேறிச் செல்வோம்!" என்று தெரிவித்துள்ளார். அணமைக் காலமாக சசி தரூர் பாஜக மற்றும் மோடியை புகழ்ந்து வருவது காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது.
- ராகுல்காந்தி இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.
- கால்பந்து போட்டி 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது.
ஐதராபாத்தில் இன்று மாலை 7 பேர் பங்கேற்கும் காட்சி கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி விளையாடுகிறார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இதில் ஆடுகிறார்கள். 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும் இந்த போட்டியில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்கிறார்.
இதற்காக ராகுல்காந்தி இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.
இன்றிரவு உப்பல் மைதானத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அணியுடன் மெஸ்ஸியின் அணி நட்பு போட்டி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கட்டணத்தை வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
- கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகளவில் இந்தியர்கள்தான் பெற்று உள்ளனர். இதற்கிடையே எச்-1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
குறிப்பாக எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (ரூ.90 லட்சம்) உயர்த்தியது. இந்த கட்டணத்தை வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் தலைமையிலான 20 மாகாணங்களின் கூட்ட மைப்பு, மாசசூசெட்ஸ் கூட்டாட்சி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.
அதில் எச்-1பி விசா கட்டண உயர்வு நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய பொது சேவைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, டிரம்பின் சட்டவிரோதமான புதிய எச்-1பி விசா கட்ட ணம் உயர்வு என்பது ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், செவி லியர்கள் மற்றும் பிற முக்கிய துறைகளில் பணி யாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும்.
இது கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும் என்றார்.
- ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
- இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.
இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.
நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரசின் யுடிஎஃப் மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு எனது வணக்கங்கள். இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.
இந்த முடிவுகள் யுடிஎஃப் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான தெளிவான அறிகுறியாகும். மேலும், இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கிறது.
செய்தி தெளிவாக உள்ளது: கேரளா, மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, பதிலளித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை விரும்புகிறது.
இப்போது எங்கள் கவனம் அசைக்க முடியாதது - கேரளாவின் சாமானிய மக்களுடன் நிற்பது, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கையாள்வது, மற்றும் வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உறுதி செய்வது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் எனது வாழ்த்துகள். இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயல்பட்ட ஒவ்வொரு கட்சித் தலைவர் மற்றும் தொண்டருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று தெரிவித்தார்.
- டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
- யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வழங்கியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.
இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
- இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். பின்னர் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியதால் டிரம்ப் பணிந்தார். இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியா மீதான 50 சதவீத வரிக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையை உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, டெபோரா ராஸ், மார்க் வீசே ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்த அதிபர் டிரம்பின் தேசிய அவசர கால அறிவிப்பை முடி வுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக் கைகள் சட்டவிரோத மானவை மற்றும் அமெ ரிக்கத் தொழிலாளர்கள், நுகர்வோர், இருதரப்பு உறவுகளுக்குத் தீங்கு விளைவிப்பவை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டெபோரா ராஸ் எம்.பி கூறும்போது, வட கரோலினாவின் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு ஆகியவை ஒரு இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.
இந்திய நிறுவனங்கள் இந்த மாகாணத்தில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்து, உயிரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான வேலை களை உருவாக்கியுள்ளன.
அதேபோல் வட கரோ லினா உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்றார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, இந்த வரிகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து அமெரிக்கத் தொழிலாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.
மேலும் நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்த வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்கா- இந்தியா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்றார். இந்த தீர்மானத்தில் பிரேசில் மீதான வரியையும் ரத்து செய்ய முன்மொழியப்பட்டு உள்ளது.
- ஆறு மாநகராட்சிகளில் நான்கை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
- எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.
இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியை வென்றதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கேரளாவில் காலூன்றி உள்ளது.
UDF மற்றும் NDA இரண்டிலிருந்தும் கடுமையான சவாலை எதிர்கொண்ட போதிலும், கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே LDF தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட சில பாரம்பரிய கோட்டைகளை LDF வென்ற போதிலும், 2020 ஆம் ஆண்டு செயல்திறனுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த செயல்திறன் குறைவே.
ஒட்டுமொத்தமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மறுமலர்ச்சிக்கான அறிகுறியாகும்.
தேர்தல் முடிவுகள் விவரம்:
152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் UDF - 79, LDF - 63
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் UDF - 7, LDF - 7
87 நகராட்சிகளில் UDF - 54, LDF - 28, NDA - 1, மற்றவை - 1
6 மாநகராட்சிகளில் UDF - 4, LDF - 1, NDA - 1 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
- முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.
- பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்த பாலஸ்தீன நகரமான காசாவில் 'பைரன்' புயல் பாதிப்பால் 14 பேர் உயிரிழந்தனர்.
புயலில் நான்கு பேர் இறந்த நிலையில் புயலை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக கூடாரம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் இறந்தனர். போரில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் சுவர் கூடாரத்தின் மீது விழுந்ததில் இரண்டு பேர் இறந்தனர்.
கடுமையான குளிரால் உறைந்து சில குழந்தைகளும் இறந்தனர். முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.
வரும் நாட்களில் காசாவில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
போரில் வீடுகள் அழிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் தற்போது தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் கூடாரங்கள் தொடர்ந்து இடிந்து விழுகின்றன. மக்கள் குளிர் மற்றும் கனமழையில் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த உபகரணங்கள் காரணமாக வெள்ளம் மற்றும் குளிரை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை என்று உள்ளூர் நிர்வாகம் கூறியுள்ளது.
- ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
- மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான நிதியை விடுவிக்காததால் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவரை மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
வயதான தாய், தந்தை மற்றும் கைக் குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும்
பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உடனடியாக தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் வராததாலும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, மூன்று நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடரவில்லை.
மேலும், ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது என்று, எனது பல
அறிக்கைகளிலும், பேட்டிகளிலும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்துள்ளேன்.
எனினும், தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வானளாவிய விளம்பரம்
செய்கிறதே தவிர, உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் படியைக்கூட பல மாதங்களாக முழுமையாக
வழங்காததால், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக் காப்பாளர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து, மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.
எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்; தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்தியதையும்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து, இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்; ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை
முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது
முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
விடியா திமுக அரசின் ஆதிதிராவிட நலத்துறை தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் படிகளை முழுமையாக வழங்காததால், விடுதிக் காப்பாளர்களே பல மாதங்களாக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக, விடுதிப் காப்பாளர்கள் மிகந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு, திமுக அரசு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலினின் 55 மாதகால விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்களைச் செய்வதாக விளம்பரம் மட்டும் வருகிறதே தவிர, எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலதில் நிதியை விடுவிக்காத விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறும், விடுதிக் காப்பாளர் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும், பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.











