என் மலர்
- தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
- தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் உள்ள ரிதுராஜ் ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா கூறுகையில, இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
- சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
- இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாச்சலத்தில் உள்ள கோவிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
வராஹலட்சுமி நரசிம்ம சுவாமியின் நிஜரூப தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த போது ரூ.300 டிக்கெட் வழங்கும் வரிசையில் அமைக்கப்பட்டு இருந்த 20 அடி நீள சுவர் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறினர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
- பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் ஒரு தலித் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சிங் கூறுகையில், ஏப்ரல் 24 ஆம் தேதி, 16 வயதுடைய அந்த சிறுமி வேரோரு கிரமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஏப்ரல் 27 ஆம் தேதி, அதே கிராமத்தைச் சேர்ந்த ஷைலேந்திர சரோஜ் என்கிற ஜாஹித், அவரது நண்பர் ஷேரு என்கிற நாசர் அகமது மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் மூன்று இளைஞர்கள் மீது பிஎன்எஸ், போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்
- இதுபோன்ற விசயங்களை இந்துக்கள் ஒருபோதும் செய்வது கிடையாது.
- வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு பாடம் கற்பிப்பதும் அந்த கடமையின் ஒரு பகுதியாகும்
பிரதமர் மோடியை நேற்று இரவு டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து பேசினார்.
பஹல்காமில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொடூர கொலை செய்யப்பட்ட சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த வாரம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பகவத், பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்குக் கடுமையான பதிலடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். "மக்களிடம் அவர்களின் மதம் என்னவென்று கேட்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுபோன்ற விசயங்களை இந்துக்கள் ஒருபோதும் செய்வது கிடையாது.
நம்முடைய மனங்களில் வலி உள்ளது. நாங்கள் கோபத்தில் இருக்கிறோம் என பேசினார். நம்முடைய அண்டை வீட்டுக்காரர்களை நாம் ஒருபோதும் துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு தீங்கிழைப்பதோ கிடையாது. ஆனால், சிலர் தீங்கானவர்களாக மாறினால், வேறு என்ன வழி? மக்களை பாதுகாக்க வேண்டியது மன்னனின் கடமை.
மன்னன் தன்னுடைய கடமையை கட்டாயம் செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு பாடம் கற்பிப்பதும் அந்த கடமையின் ஒரு பகுதியாகும்" என பேசினார். நெற்றிய உரையாடலிலும் மோகன் பகவத் இதையே வலியறுத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே நேற்று ராணுவ தளபதிகளுடன் நடந்த கூட்டத்தில் எதிர் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
- கார் ஓட்டுநர் ஒரு காஷ்மீர் பெண்ணைத் தாக்கிய சம்பவமும் சண்டிகரில் நிகழ்ந்தது.
- இந்து மருத்துவர் தேசபக்தி என்ற பெயரில் ஒரு முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு அதிகரித்துள்ளதை சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (A.P.C.R.) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு கொலை உட்பட பல முஸ்லிம் விரோத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அறிக்கையின்படி, முஸ்லிம் என்பதால் பலர் தாக்குதல்களையும் அவமானங்களையும் சந்தித்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் க்ஷத்திரிய கோ ரக்ஷா தள உறுப்பினர் ஒருவர் ஒரு முஸ்லிமைக் கொன்றார்.
பெங்களூருவில் ஒரு முஸ்லிம் ஆர்வலர், பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விவாதத்தில் பங்கேற்காததற்காகவும், காயத்ரி மந்திரத்தை ஓதாததற்காகவும் அவரது சக ஊழியர்களால் அவமதிக்கப்பட்டார்.
சண்டிகரில் உள்ளூர்வாசிகளால் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் என்று கூறி அச்சுறுத்தப்பட்டனர். ஒரு கார் ஓட்டுநர் ஒரு காஷ்மீர் பெண்ணைத் தாக்கிய சம்பவமும் சண்டிகரில் நிகழ்ந்தது.
காஷ்மீர் மாணவர்கள் விடுதியில் தாக்கப்படுவதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், சண்டிகரில் உள்ள கல்வி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளது. இதேபோன்ற ஒரு சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவிலும் நடந்தது. காஷ்மீர் மாணவர்கள் தங்கியுள்ள விடுதி அறையை இடிக்க அங்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அரியானாவில் அம்பாலாவில், ஒரு முஸ்லிம் வர்த்தகரின் கடை மற்றும் ரிக்ஷாவை இந்து அமைப்புகள் தாக்கின. அரியானாவில் மேலும் இரண்டு முஸ்லிம் வியாபாரிகள் தாக்கப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தின் ஹாத்ராஸில் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கொல்கத்தாவில் ஒரு இந்து மருத்துவர் தேசபக்தி என்ற பெயரில் ஒரு முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.
- இன்று அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-17 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை இரவு 8.41 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : ரோகிணி இரவு 8.32 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை
மாலை 4 மணி முதல் 5 மணி வரை
அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கும்பகோணம் பெரிய கடை தெருவில் 12 கருட சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு. மங்கையர்கரசி நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-நன்மை
கடகம்-ஆதாயம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-களைப்பு
துலாம்- உறுதி
விருச்சிகம்-போட்டி
தனுசு- ஆர்வம்
மகரம்-உதவி
கும்பம்-லாபம்
மீனம்-நன்மை
- கேரளாவை சேர்ந்த இளைஞன், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியுள்ளார்.
- உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது.
கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது.
பத்து அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த இளைஞன், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரிடம் வாக்குவாதம் செய்தது.
இது மோதலாக மாறி அவர்கள் அந்த இளைஞனை உதைத்தும், தடியால் தாக்கியும் உள்ளனர். இதனால் உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இளைஞன் உடலை கைப்பற்றிய கர்நாடக போலீசார் இந்த சம்பவத்தில் 15 பேரை கைது செய்துள்ளனர்.
- அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேரமில்லாமல், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றார்.
- கேலிச் சித்திரத்துக்கு பாஜக தலைவர்கள் பலரிடமும் இருந்து கண்டனங்கள் வந்தன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி மீது காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தேவைப்படும் நேரத்தில், 'கயாப்' (காணவில்லை) என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் பகிர்ந்த மோடியின் தலையில்லாத கேலிச் சித்திரம் வைரலாகியது.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமஷ் , சிறப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாததை விமர்சித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேரமில்லாமல், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றதாக அவர் விமர்சித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் பகிர்ந்த கேலிச் சித்திரத்துக்கு பாஜக தலைவர்கள் பலரிடமும் இருந்து கடுமையான கண்டனங்கள் வந்தன. பாஜக இந்த விவகாரத்தை பெரும் சர்ச்சையாக்கிய நிலையில் காங்கிரஸ் தனது பதிவை நீக்கியுள்ளது.
- பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங்.
- வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21).
கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்ற வன்ஷிகா ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.
இரவு நீண்ட நேரமாகியும் வன்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களாக தேடப்பட்டு வந்த வன்ஷிகா நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வன்ஷிகாவின் உடல் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- மூன்றாவது சுற்றில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 5-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.