சினிமா செய்திகள்

'குங்குமப்பூ கலந்த பான் மசாலா' விளம்பர சர்ச்சை - பான் இந்தியா நடிகர்களுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

Published On 2025-03-09 12:39 IST   |   Update On 2025-03-09 12:39:00 IST
  • பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது என்று விளம்பரப்படுத்தினர்.
  • "குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம், பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விமல் பான் மசாலாவை தயாரிக்கும் ஜேபி இண்டஸ்ட்ரீஸின் தலைவர் விமல் குமார் அகர்வாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவரின் புகாரில், மேற்கூறிய நடிகர்கள் நடித்த பான் மசாலா விளம்பரங்களில், " தானே தானே மெய்ன் ஹை கேசர் கா தம் (பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது)" என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஜேபி இண்டஸ்ட்ரீஸ் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வருகிறது. பொது மக்கள் தொடர்ந்து பான் மசாலாவை அதிகம் உட்கொள்கிறார்கள்.

"குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் பான் மசாலா ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை வரவழைக்கிறது.

Full View

எனவே மக்களை தவறாக வழிநடத்திய நிறுவனம் மீதும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையம் தற்போது சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கும் நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனைத்து நடிகர்களும், பான் மசாலா தயாரிப்பு நிறுவனமும் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News