சினிமா செய்திகள்
வீர தீர சூரன் FDFS - துரத்திய ரசிகர்கள்.. ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்ற விக்ரம்
null

வீர தீர சூரன் FDFS - துரத்திய ரசிகர்கள்.. ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்ற விக்ரம்

Published On 2025-03-28 10:52 IST   |   Update On 2025-03-28 11:44:00 IST
  • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
  • படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படத்தை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.

வேகமாகவும், விறுவிறுப்பாகவும் கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குனர் எஸ்.யு அருண்குமார். நடிகர்களின் மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் காண முடிகிறது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை நேற்று மாலை ரசிகர்களுடன் சத்யம் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தார் சீயான் விக்ரம். அதே சமயத்தில் இவருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.

திரைப்படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது ரசிகர்களின் அன்பு கடலால் சூழப்பட்டார் நடிகர் விக்ரம்.  அதனால்  திரையரங்கை விட்டு வெளியே செல்ல அவருக்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் மேலும் கூட்டம் சேராமல்  இருக்க உடனே பக்கத்தில் இருக்கும் ஆட்டோவில் ஏறி சென்றார் சீயான் விக்ரம். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படங்களை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.திரைப்படம் மிகவும் வேகமாக, விறுவிறுப்பாகவும் நடிகர்களின் மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் காண முடிகிறது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் படத்தை நேற்று மாலை ரசிகர்களுடன் சத்யம் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தார் சீயான் விக்ரம். அதே சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.திரைப்படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது ரசிகர்களின் அன்பு கடலாம் சுழப்பட்டார் நடிகர் விக்ரம் அதனால் அவரால் திரையரங்கை விட்டு வெளியே செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் மேலும் கூட்டம் சேராமல் இருக்காமல் இருக்க உடனே பக்கத்தில் இருக்கும் ஆட்டோவில் ஏறி சென்றார் சீயான் விக்ரம். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News