வழிபாடு

3 வடிவங்களாய் அருள்பாலிக்கும் வடிவேலன்

Published On 2023-02-28 05:57 GMT   |   Update On 2023-02-28 05:57 GMT
  • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது.
  • பழனியில் முருகப்பெருமான் 3 இடங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தமிழ்கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு பல கோவில்கள் இருந்தாலும் அறுபடை வீடுகள் தனிச்சிறப்பு. அந்த அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது.

பழனி என்றதும் நம் கண்முன் வருவது மலை மீது உள்ள கோவில்தான். ஆனால் பழனியில் முருகப்பெருமான் 3 இடங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மலைக்கோவிலில் தண்டாயுதபாணியாகவும், திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுதசுவாமியாகவும், ஊர்க்கோவிலில் (பெரியநாயகிஅம்மன் கோவில்) வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியாகவும் தனித்தனியே எழுந்தருளியுள்ளனர்.

இது பழனிக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. பழனிக்கு வரும் பக்தர்கள் இந்த 3 கோவில்களுக்கும் சென்று வணங்கி வருகின்றனர்.

Tags:    

Similar News