திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வஸ்திரங்கள் ஆன்லைனில் ஏலம்
- ஏப்ரல் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது.
- 297 புதிய, பயன்படுத்தப்பட்ட மற்றும் பகுதி சேதமடைந்த ஆடைகள் உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானம் தொடர்புடைய கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக பட்டு வஸ்திரங்கள் முதல் ஏராளமான பொருட்கள் வழங்குகின்றனர்.
இந்த வஸ்திரங்கள் வரும் ஏப்ரல் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது.297 புதிய, பயன்படுத்தப்பட்ட மற்றும் பகுதி சேதமடைந்த ஆடைகள் உள்ளன.
இதில் ஆர்ட் சில்க், பாலியஸ்டர், வேட்டிகள், நைலான், நைலக்ஸ் புடவைகள், ஆப் புடவைகள், துணி பிட்டுகள், ஜாக்கெட் துண்டுகள், லுங்கிகள், சால்வை, பெட் ஷீட்கள், தலையணை கவர்கள், பஞ்சாபி ஆடை பொருட்கள், கம்பளங்கள், போர்வைகள், திரைச்சீலைகள், கர்ப்பக்கிரஹ துணிகள், ஸ்ரீவாரி குடைகள் ஏலம் விட பட உள்ளது.
இது குறித்த விவரங்களுக்கு திருப்பதியில் உள்ள திருப்பதி தேவஸ்தான மார்கெட்டிங் அலுவலகத்தை 0877-2264429 அல்லது திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.