வணிகம் & தங்கம் விலை
இந்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது .. ரிசர்வ் வங்கி உத்தரவு - ஏன் தெரியுமா?

இந்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது .. ரிசர்வ் வங்கி உத்தரவு - ஏன் தெரியுமா?

Published On 2025-03-29 15:05 IST   |   Update On 2025-03-29 15:05:00 IST
  • இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது.
  • கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும்

 மார்ச் 31 (திங்கள்கிழமை) ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் பொது விடுமுறை ஆகும். வார இறுதி விடுமுறையை தொடர்ந்து திங்கள்கிழமை இந்த விடுமுறை வருகிறது.

ஆனால் இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது. எனவே 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்க வேண்டும். இதற்காக மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில், அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும்.

அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம். இதர பொதுவான சேவைகள் இயங்க வாய்ப்பில்லை. 

Tags:    

Similar News