உள்ளூர் செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தல்: அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத்

Published On 2025-03-03 11:00 IST   |   Update On 2025-03-03 11:00:00 IST
  • இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
  • வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

தாராபுரம்:

தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2026 தேர்தலுக்குள் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.

வக்பு வாரிய சொத்து என தாராபுரம், அலங்கியம் திருப்பரங்குன்றம் உள்பட பல பகுதிகளில் இந்துக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே நாளில் ஒன்பது பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக முன்னணியில் அ.தி.மு.க., சீமான், பா.ஜ.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு ஒரு அணியில் நின்று தி.மு.க. அணியினரை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News