உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- பேராசிரியர் போக்சோவில் கைது

Published On 2025-02-08 14:59 IST   |   Update On 2025-02-08 14:59:00 IST
  • பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
  • புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டிவனம்:

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

தற்போது திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் அரங்கேறி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு பொருளாதார பேராசிரியராக குமார் பாடம் எடுத்து வருகிறார்.

இவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதள மூலமாகவும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பேராசிரியர் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும் அதற்கு மாணவி மறுத்து விட்டதாகவும் மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி மாணவி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News