உள்ளூர் செய்திகள் (District)

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-10-26 09:44 GMT   |   Update On 2023-10-26 09:44 GMT
  • ரவீந்திரநாத் வீட்டினுள் தூக்கு மாட்டிக் கொண்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குமரன் நகரை சேர்ந்தவர் கங்கா தரன் மகன் ரவீந்திரநாத். இவரது மனைவி ஸ்ரீகுமாரி. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே ஜீவா விதியில் வசித்து வந்தனர்.

ரவீந்திரநாத் சில ஆண்டு களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரவீந்திரநாத் பெருந்துறை அருகே குமரன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மிகுந்த மன வேதனை அடைந்த ரவீந்திரநாத் வீட்டினுள் தூக்கு மாட்டிக் கொண்டார்.

பின்னர் தகவல் அறிந்த ஸ்ரீகுமாரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரநாத்தை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ரவீந்திரநாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ஸ்ரீகுமாரி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News