உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே கார் மோதி விவசாயி பலி

Published On 2023-10-08 12:57 IST   |   Update On 2023-10-08 12:57:00 IST
  • இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56), விவசாயி. இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார்மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News