உள்ளூர் செய்திகள் (District)

மூதாட்டி கையில் இருந்து தவறி கிணற்றில் விழுந்த 6 மாத குழந்தை பலி

Published On 2023-05-11 07:51 GMT   |   Update On 2023-05-11 07:51 GMT
  • மூதாட்டி கையில் இருந்து தவறி கிணற்றில் விழுந்த 6 மாத குழந்தை பலியானது
  • சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊத்துக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38). இவரது மனைவி ஜெயமணி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ஜெயமணியின் மாமியார் பரமேஸ்வரி சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர்.இந்நிலையில், மாமியார் பரமேஸ்வரி, ஆறு மாத பெண் குழந்தை ஆத்யாவை, துாக்கி கொண்டு வீட்டுக்கு அருகே உள்ள, கிணற்று பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தை ஆத்யா, பரமேஸ்வரியின் கையில் இருந்து தவறி, கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.அருகில், இருந்தவர்கள் குழந்தையின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News