உள்ளூர் செய்திகள்

மயக்கமடைந்த பெண்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சி. 

காங்கயம் அருகே விவசாயிகள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

Published On 2023-09-25 16:21 IST   |   Update On 2023-09-25 16:21:00 IST
  • சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
  • பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும்

 காங்கயம்,செப்.25-

பிஏபி பாசன பகுதிகளில் தண்ணீா் திருட்டைத் தடுக்க வேண்டும், மற்ற பகுதிகளில் சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிதிலமடைந்த பகிா்மான, உபபகிா்மான வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,

பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே, கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், தொடா் பட்டினிப்போராட்டத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா்.போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு பெண் சனிக்கிழமை மயங்கி விழுந்தாா்.

போராட்டத்தின் 3 -ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை 5 பெண்கள் மயங்கி விழுந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.மேலும் அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ேதால்வியில் முடிந்தது.

இதனால் விவசாயிகள் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

Tags:    

Similar News