இந்தியா
அரசு வேலை, ரூ.4 கோடி பணம், நிலம்... மூன்றில் எது வேண்டும்- வினேஷ் போகத்திடம் கேட்ட அரியானா அரசு

அரசு வேலை, ரூ.4 கோடி பணம், நிலம்... மூன்றில் எது வேண்டும்- வினேஷ் போகத்திடம் கேட்ட அரியானா அரசு

Published On 2025-03-27 17:28 IST   |   Update On 2025-03-27 17:28:00 IST
  • விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும்
  • என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று வினேஷ் போகத்திடம் கேட்க அரசாங்கம் முடிவு

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்கா தேர்வானார்.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது ஹரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' வேலை ஆகிய மூன்றில் எதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு பேசிய பேசிய நயாப் சிங் சைனி , "வினேஷ் போகட் இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு விளையாட்டுக் கொள்கையின் கீழ் சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" எனறு தெரிவித்தார்.

Tags:    

Similar News