காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பாஜக-வுக்கு பணியாற்றுபவர்களை களைந்தெறிவது அவசியம்: ராகுல் காந்தி
- காங்கிரஸ் கட்சி அதன் பொறுப்புகளை நிறைவேற்றும் வரை குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
- இதனால் நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் வரை எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள் என நாம் அவர்களிடம் கேட்கக் கூடாது.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.
2-வது நாளான இன்று கட்சி தொடர்களிடையே உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
குஜராத் காங்கிரசில் இரண்டு விதமான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். மக்களிடம் நேர்மையாக இருப்பவர்கள் அவர்களுக்காகப் போராடுபவர்கள், அவர்களை மதிக்கிறார்கள். காங்கிரசின் சித்தாந்தத்தை இதயத்தில் வைத்திருக்கிறார்கள்.
மற்றவர்கள் மக்களிடமிருந்து வெகு தொலைவில் அமர்ந்திருக்கிறார்கள். மக்களவை அவர்கள் மதிக்கவில்லை, அவர்களில் பாதி பேர் பாஜகவுடன் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பாஜக-வுக்கு பணியாற்றும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களைந்தெறிவது அவசியம். காங்கிரஸ் கட்சி அதன் பொறுப்புகளை நிறைவேற்றும் வரை குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். இதனால் நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் வரை எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள் என நாம் அவர்களிடம் கேட்கக் கூடாது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.