கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: வெற்றியின் மகிழ்ச்சியில் ஞாபக மறதி.. ரோகித், ராகுலின் செயல் வைரல்

Published On 2025-03-11 12:31 IST   |   Update On 2025-03-11 12:31:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
  • 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை வென்றது வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கோப்பையுடன் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பு முடிந்த பின்னர் அங்கிருந்து கிளம்பிய ரோகித், சாம்பியன்ஸ் கோப்பையை மறந்து விட்டு சென்றார். இதனை கவனித்த அதிகாரி ஒருவர் கோப்பையை எடுத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதேபோல் சாம்பியன்ஸ் டிராபி கொடுப்பதற்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு வெள்ளை நிற கோட் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீரர்களாக அந்த கோட்டை வாங்கினர். அப்போது கேஎல் ராகுல் மறந்துபோய் பேட்டிங் பேட்களுடன் அதை வாங்க சென்றார். இதனை பார்த்த இந்திய அணி வீரர்கள் ராகுலை பார்த்து சிரித்தனர். உடனே சுதாரித்து கொண்ட கேஎல் ராகுல் பேட்களை கழற்றினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



 


Tags:    

Similar News