டென்னிஸ்
கத்தார் ஓபன்: அரையிறுதியில் 2-ம் நிலை வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
- முதல் செட்டை 3-6 என இழந்தார்.
- 2-வது செட்டை 1-6 விரைவில் இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக், தரநிலை பெறாத லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓஸ்டாபென்கோ அபாரமாக விளையாடினார். அவரது ஆட்டத்திற்கு ஸ்வியாடெக்கால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஓஸ்டாபென்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
4 முறை ஏஸ் வரை சென்ற நிலையில் கேம்-ஐ வென்றார் ஓஸ்டாபென்கோ. ஆனால் ஸ்வியாடெக் ஒரேயொரு முறைதான் ஏஸ் வரை சென்ற நிலையில் கேம்-ஐ வென்றார். 10-ல் ஐந்து முறை பிரேக் பாயிண்ட்ஸ் பெற்றார் ஓஸ்டாபென்கோ. அதேவேளையில் ஸ்வியாடெக் 3-ல் ஒருமுறைதான் பிரோக் பாயிண்ட் பெற்றார்.