தமிழ்நாடு

திமுக கட்சி இல்லை.. அது ஒரு கம்பெனி- செல்லூர் ராஜு

Published On 2024-07-27 13:32 GMT   |   Update On 2024-07-27 13:32 GMT
  • உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான்.
  • திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.

உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:-

உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான். மு.க ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும்போது எனது குடும்பத்தில் யாரும் அதாவது மகனோ, மருமகனோ வேறுயாரும் திமுகவிற்கு எந்த பதவியிலும் வரமாட்டார்கள் என்று கூறினார். நான் மட்டும் தான் அரசியலில் இருப்பேன் என்றும் கூறினார்.

இப்போது உதயநிதிக்கு முதலில் இளைஞர் அணி, பின்னர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், இனி துணை முதலமைச்சர் என்று பதவிகள் வழங்கப்படுகிறது.

அ.தி.மு.க. மட்டும் தான் ஜனநாயக இயக்கம். அடுத்து தொண்டர்களும் மேலே தலைவர்களாகளாம், பொது செயளாளராகளாம், முதலமைச்சராகளாம்.

திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.

பொதுவாக திமுக கட்சியில்லை அது ஒரு கம்பெனி. தி.மு.க. என்பது கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி.

முதலில் கருணாநிதி. அதன் பிறகு மு.க.ஸ்டாலின். பின்னர் உதயநிதி. இன்று மூத்த தலைவர் துரைமுருகன் இன்பநிதி வந்தாலும் கூட நாங்கள் தோலில் துக்கிட்டுப் போவோம் என்று சொல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News