தமிழ்நாடு (Tamil Nadu)

மாட்டுக்கறி சாப்பிடுபவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் மேல்சாதியா? - சீமான்

Published On 2024-09-26 11:05 GMT   |   Update On 2024-09-26 11:05 GMT
  • லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டிய உருட்ட இருக்கே இந்தியா முழுமைக்கும் பெரிய உருட்டு.
  • மாட்டுமூத்திரம் குடிக்கும் நீ மாட்டு கொழுப்பு சாப்பிட மாட்டாயா? இதுதான் அதிகப்படியான கொழுப்பு.

திருப்பதி லட்டுவில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்து குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* திருப்பதி லட்டு பிரச்சனையில் யாரிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளோம், யார் அதை கலந்து என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துவிட்டு வேறொரு நபரிடம் ஒப்பந்தம் கொடுத்துவிட்டால் பிரச்சனை முடிந்தது.

* லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டிய உருட்ட இருக்கே இந்தியா முழுமைக்கும் பெரிய உருட்டு

* நாட்டிலிருந்து வரும் பால் நெய் சாப்பிடும் நீ மாட்டிலிருந்து வரும் கொழுப்பு சாப்பிட்டால் செத்துவிடுவாயா?

* இவர்கள் ஒரு கோட்பாடு வைத்துள்ளார்கள். மாட்டுக்கறி சாப்பிடும் நான் கீழ்சாதி, மாட்டு பால் குடிக்கிறவன் இடைநிலை சாதி , மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் மேல்சாதி

* உலகத்திலேயே இந்தியாவில் தான் பாலும் நெய்யும் கொட்டப்படுகிறது, மாட்டு மூத்திரம் குடிக்கபடுகிறது.

* மாட்டுமூத்திரம் குடிக்கும் நீ மாட்டு கொழுப்பு சாப்பிட மாட்டாயா? இதுதான் அதிகப்படியான கொழுப்பு

* பெருமாளை நீங்கள் மதிக்கிறீர்களா இல்லை கேவலப்படுத்துகிறீர்களா? சாதாரண லட்டுவுக்கு எல்லாம் பெருமாள் மாசுபடுவாரா? புனிதம் கேட்டு போகுபவரா?

* சாதி, மதம், சாதியை வைத்து அரசியல் செய்கிறபவன் மக்களை பற்றி சிந்திக்கவே மாட்டான். மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனுக்கு சாதி, மதம், சாதியை பற்றி சிந்திக்க நேரமே இருக்காது

* சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தான் திருப்பதி லைட்டில் கொழுப்பு கலந்துவிட்டார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்ட, கிறிஸ்தவர் ஜெகன்மோகன் ஆட்சியில் தான் கொழுப்பு கலந்துவிட்டார்கள் என்று அவர்களும் குற்றம் சாட்டுகின்றனர் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News