தமிழ்நாடு (Tamil Nadu)

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-07-07 04:09 GMT   |   Update On 2024-07-07 04:09 GMT
  • அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி. ஆகியோர் தலைமையில் மாலை 4 மணிக்கு திருவாமாத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
  • திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

இத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இத்தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி வருகிறார்.

அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி. ஆகியோர் தலைமையில் மாலை 4 மணிக்கு திருவாமாத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து, மாலை 5 மணிக்கு காணையிலும், 6 மணிக்கு பனமலைப்பேட்டையிலும், இரவு 7 மணிக்கு அன்னியூரிலும் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார்.

அதனை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தும்பூரிலும், 9 மணிக்கு நேமூரிலும், மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News