தமிழ்நாடு
சென்னை: வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 4 பேர் படுகாயம்
- காயமடைந்த 4 பெரும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மற்ற வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார், இரு சக்கர வாகனம், ஆட்டோ, ட்ரை சைக்கிள் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த 4 பெரும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்தனர். விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.