தமிழ்நாடு

தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார் முதலமைச்சர்- அன்பில் மகேஷ் வாழ்த்து

Published On 2025-03-01 09:44 IST   |   Update On 2025-03-01 09:44:00 IST
  • அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார்.
  • 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.

அமைச்சர் பெருமக்களும், இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் வாழ்த்துகள் தெரிவிக்க காத்துக்கொண்டிருக்கையில், நேராக அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.

மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களோடு இணைந்து முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி வணங்கினோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News