தமிழ்நாடு

நாடு கடத்தப்பட்டவர்கள் பயங்கரவாதிகளா? கொலைபாதகர்களா?- டி.ஆர்.பி.ராஜா காட்டம்

Published On 2025-02-06 18:20 IST   |   Update On 2025-02-06 18:20:00 IST
  • இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே!
  • எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தியவர்களை மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?

அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள்.

இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ?

இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!

இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா !? ஒரு கண்டனம்... கொஞ்சம் எதிர்ப்பு... அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News