தமிழ்நாடு

டாஸ்மாக் அலுவலகத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

Published On 2025-03-07 07:30 IST   |   Update On 2025-03-07 07:30:00 IST
  • டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக தொடர்கிறது.
  • ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், தனியார் மதுபான நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக தொடர்கிறது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே. டாஸ்மாக் ஒப்பந்ததாரர் தலைமை அலுவலகம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.

ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

கால்ஸ் மதுபான ஆலையில் நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News