மக்களை பற்றி கவலைப்படாத தமிழக அரசு - இ.பி.எஸ். குற்றச்சாட்டு
- போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மக்களுக்காக சட்டமன்றம், சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல.
சட்டசபையில் கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் அவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெறியேற்றினர்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜீரோ ஹவரில் பேச அனுமதி கேட்டபோது அனுமதி அளிக்கவில்லை.
* மதுரையில் காவலர் கொலை தொடர்பாக பேச அனுமதி அளிக்கவில்லை.
* தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை சுதந்திரமாக நடக்கிறது.
* காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது.
* போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* காவல்துறையினர் இனியாவது காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்.
* மக்களின் பிரச்சனைகளை பேச அனுமதிக்கவில்லை.
* துணை முதலமைச்சர் பேசும்போது இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக வெளியேற்றம். இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர்.
* தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாத அரசு.
* மக்களுக்காக சட்டமன்றம், சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல.
* தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
* சர்வாதிகார போக்கை சட்டமன்றத்தில் அரங்கேற்றி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.