தமிழ்நாடு
இனிமேல் அனுமதி பெறாமல்தான் போராட்டம்- அண்ணாமலை அதிரடி
- பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை பிரேம் போட்டு மாட்டுவோம்.
சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-
போராட்டம் நடத்தியவர்களை மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் விடுவிக்க மறுத்தது ஏன்?
ரேபிஸ்ட் ஆக இருந்தால் ராஜமரியாதை, மணல் கடத்தினால் ராஜமரியாதை.
இனி முன் அனுமதி பெறாமல் திடீர் போராட்டங்களை நடத்தப் போகிறோம்.
அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை பிரேம் போட்டு மாட்டுவோம்.
நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது. பொறுமையை சோதித்து விட்டதால் இன்றைக்கு இரவில் இருந்து காவல்துறையை தூங்க விடமாட்டேன்.
போலீசார் தூங்க முடியாத அளவுக்கு மே மாதம் வரை போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.