தமிழ்நாடு
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு கிரிமினல்- அண்ணாமலை ஆவேசம்
- முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் என்னை ரிமாண்ட் செய்யட்டும்.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.
சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்திலும் ஈடுபடப் போகிறோம்.
சட்டத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை. அமைச்சர் ரகுபதி மீது சொத்து குவிப்பு வழக்க நிலுவையில் உள்ளது.
முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் எனு்னை ரிமாண்ட் செய்யட்டும்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.
இவ்வாறு கூறினார்.