தமிழ்நாடு
மகா சிவராத்திரி- அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ் வாழ்த்து
- மகா சிவராத்தி வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
நாடு முழுவதும் விரதமிருந்து இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும் மகா சிவராத்தி வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதிலும் விரதம் இருந்து, இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும், 'மகா சிவராத்திரி' தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,சிறப்பு வாய்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் நல்வழி பிறந்து, வெற்றிகள் நம் வசமாகி, எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.