தமிழ்நாடு

இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு- தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்

Published On 2025-02-25 12:22 IST   |   Update On 2025-02-25 12:22:00 IST
  • தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
  • தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை ஒன்றிய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டினர்

இந்தியை திணிப்பதாக ஒன்றிய அரசை கண்டித்து 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாணவரணி அறிவித்து இருந்தது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கல்வி நிதியை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசுக்கு நிபந்தனை விதிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை ஒன்றிய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டினர்

மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்தும், கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையிலும் ஒன்றிய அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி, திராவிடர் மாணவர் கழகம், இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

Tags:    

Similar News